நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
GS Office

காரைநகரில் நான்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணி வழங்கப்பட்டது! |03.Feb.2022

இலங்கை அரசின் 2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிற்கும் தலா 30 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலக ஆளுகைக்குள் 9 கிராம சேவை பிரிவுகள் உள்ளன. மேற்படி ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் முதல்கட்டமாக கிராம சேவகர் காரியாலயம் இல்லாத பிரிவுகளிற்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்கவும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் புதிய வருமான வழிகளை ஊக்குவிக்கவும் பயன்படுத்த முடியும்.

காரைநகரில் கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணிகளை காரைநகர் பிரதேச செயலகத்திற்கு வழங்க முன்வருமாறு கட்ந்த வருடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து கிராமசேவகர் பிரிவு J/47 வலந்தலை, J/45 கருங்காலி, J/44, பாலாவோடை, J/43 விளானை ஆகிய பகுதிகளிற்கு கிராம சேவகர் காரியாலயம் அமைக்க காணிகளை வழங்க முன்வந்தனர்.

J/47 வலந்தலை பிரிவிற்கு திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா பண்டித்தாழ்வு கோணன்ஓடையில் அமைந்துள்ள தனது காணியில் 2 பரப்பு காணியினையும்,

J/45 கருங்காலி பிரிவிற்கு திரு.நமசிவாயம் சச்சிதானந்தன்(இளவரசி ரெக்ஸ், யாழ்ப்பாணம்),

J/44 பாலாவோடை பிரிவிற்கு திரு.ஆறுமுகம் சபாநாதன்(பாலாவோடை, டென்மார்க்),

J/43 விளானை பிரிவிற்கு பிரபல வர்த்தகர் திரு.நேசேந்திரம் சிதம்பரப்பிள்ளை அவர்களும் காணிகளை அன்பளிப்பாக வழங்கினர்.

அதனையடுத்து J/47, J/45, J/44 ஆகிய பிரிவுகளில் கிராம சேவகர் அலுவலகம் அமைக்க காரைநகர் பிரதேச செயலர் திரு.மரியதாசன் ஜேகூ அவர்கள் தலைமையில் 03.02.2022 அன்று அத்திவாரம் இடப்பட்டது.

J/47 வலந்தலை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் நிதியில் இருந்து 21 இலட்சம் ரூபா செலவில் திரு.செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய இரண்டு பரப்பு காணியில் கிராமசேவகர் காரியாலயம் அமைக்கப்படுவதோடு, 6 இலட்சம் ரூபா செலவில் பெரியமணல் கிராம முன்னேற்றச் சங்கத்தின் ஊடாக தேங்காய் எண்ணை ஊற்றும் ஆலைக்கான உபகரணம் பெற்றுக்கொடுக்கவும், மேலும் மூன்று குடும்பங்களிற்கு தலா ஒரு இலட்சம் வீதம் புதிய தொழில் முயற்சிக்கான உதவியும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605