Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி கமலாதேவி இராஜதுரை |மறைவு: 10.12.2012

திருமதி கமலாதேவி இராஜதுரை
மணற்பிட்டி,காரைநகர்
(நாவலப்பிட்டி)

தோற்றம்: 01.11.1946 மறைவு: 10.12.2012
காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜதுரை அவர்கள் 10-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், இராஜதுரை(நாவலப்பிட்டி குகன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், இராஜகுமாரி(ஆசிரியை), சாந்தகுமாரி(கனடா), சிவரூபி(வவுனியா), சிறிறஞ்சன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் விமலாதேவி(கனடா), சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பிரபாகரன்(கனடா), பேரின்பநாயகம்(உரிமையாளர் சரஸ்வதி மில்ஸ் – வவுனியா), நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், கனகம்மா, பத்மநாதன், புவனேஸ்வரி மற்றும் கலாநிதி(கனடா), நாகராஜா(கனடா), கற்பகநாதன்(அப்புத்தளை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன்(கனடா), மயூரி, கஜன், கபிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4:00 மணியளவில் நாவலப்பிட்டி பௌவாகம பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராஜதுரை – கணவர்
மரண அறிவித்தல்

Leave a Reply