Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆறுமுகம் கனகம்மா | மறைவு: 07.12.2012

திருமதி ஆறுமுகம் கனகம்மா
மல்லிகை, காரைநகர்

தோற்றம்: 06.09.1933 மறைவு: 07.12.2012
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம்
கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற
ஆறுமுகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மாணிக்கம், பாலசிங்கம்,
அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை,
ஞானேஸ்வரன் (கணக்;கன் , மீசோராம்) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் வேதரடைப்பு இல்லத்தில் ஞாயிறு காலை 8:00 மணிக்கு
நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: திருமதி சோமசுந்தரம் இந்திராதேவி (பெறாமகள்)
வேதரடைப்பு, காரைநகர்.

Leave a Reply