கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014
31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியட்டி
வீட்டுகிரியை அழைப்பிதழும்!
அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்
மறைவு: 05.08.2014
திதி: 04.09.2014
எமது குடும்ப தலைவன் அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்
அவர்களின் மறைவு செய்தி கேட்டு எமது வீட்டுக்கு ஓடோடி
வந்தவர்களிற்கும், ஆறுதல் கூறி எமது தந்தையின் இழப்பின் துக்கத்தில் பங்கெடுத்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், துயருற்ற வேளையில் தோளோடு தோள் நின்று அனைத்து பணிகளிலும் பங்கேற்ற உற்றார், உறவினர்கள்,
நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை
கூறிக்கொள்வதோடு, 07.09.2014 அன்று கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறுகின்ற அந்தியேட்டி வீட்டுகிரியைகளிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளுமாறும் அதனைத் தொடர்ந்து
நடைபெறும் மதிய உணவில் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


Leave a Reply
You must be logged in to post a comment.