கனடா காரை கலாசார மன்ற வருடந்த 2024 “காரை ஒன்றுகூடல்” நடத்தப்படுமா?

கனடா காரை கலாசார மன்ற நிர்வாகத்தினரால் வருடந்தோறும் நடாத்தப்படும் ‘காரை ஒன்றுகூடல்’ இந்த ஆண்டு நிர்வாகத்தால் நடாத்தப்படமாட்டாது என நம்பப்படுகிறது. காரணம் 28.04.2024 க்கு பின்னர் எந்தவொரு தலைமையிலும் கீழ் எந்தவொரு நிர்வாக சபையும் கடந்த இரண்டு மாதமாக மன்றத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

28.04.2024 கடந்த ஏப்ரல் மாதம் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தின்போது மன்றத்தின் தற்காலிக கோர்ட் வழக்குகளை கருத்தில் கொண்டு எவ்வித நடைமுறைகளையோ அல்லது மன்றத்தின் யாப்பு விதிகளையோ கருத்தில் கொள்ளாது வழக்கு போட்டவரிடமே மன்ற நிர்வாகத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டார்.

‘ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது’ என்னும் பழமொழிக்கு இணங்க கடந்த இரண்டு மாத காலமாக கடந்த நிர்வாகத்தினரிடமிருந்து வரவு செலவு கணக்குகளையோ அல்லது வங்கி கணக்குகளையோ அல்லது மன்றத்தின் நிர்வாக பொறுப்புகள் எதையுமே பொறுப்பேற்றுக்கொள்ளாத நிலையில் தனது வழக்குகளிற்கு ஆதாரமாகவும் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாகவும் தனது மனக்கிலேசங்களிற்கும் இருட்டில் தனிமையில் வாழும் நபர் கனடிய சிவில் சட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விசாரணைகளிற்கு வரமுடியாத விளக்கங்களை முன்வைத்து தனது மானம் போய்விட்டது, மரியாதை போய்விட்டது என பணத்தை அறவிடும் நிலையில் கோர்ட் கேசுகள் மூலம் பலரையும் black mail செய்து வருகின்றார் என்பது அப்பட்டமாக இதுவரை கடந்த பத்து ஆண்டுகளில் கனடா வாழ் காரை மக்களும் உலகளாவிய காரை மக்களும் நன்கு அறிந்த விடயம்.

சிவில் வழக்குகளிற்கான ஆயத்தங்களை தானே சொந்தமாக மேற்கொண்டு இதுவரை 20 பேர்களுற்கு மேற்பட்டவர்களிற்கு வழக்கு தொடர்வதால் அதற்கு உரிய முறையில் கோர்ட்டிற்கு பதில் வழங்கவும், அவரால் தொடங்கப்படும் வழக்குகளிற்கு எதிராளியாக கோர்ட் செல்வதற்கும் வக்கீல் மூலமாக செல்ல வேண்டிய நிலையில் எதிராளியா சார்பில் முதல் விளக்கத்தை கோர்ட் இற்கு வழங்கவும் மட்டுமே குறைந்த பட்சம் 2500 டொலர்கள்(5 இலட்சம் ரூபாய்கள்) வக்கீலுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் ஊர்ப்பணியில் ஈடுபடும் பலரும் அச்சமும் தயக்கமும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொள்ள முடியாத ஒரு நிர்வாகத்தால் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயரால் ‘காரை ஒன்றுகூடல்’ இந்த ஆண்டு நடாத்த முடியாது என்பது தெளிவான உண்மை.

வங்கி கணக்குகள் அற்ற நிலையிலும், பொறுப்பாக தலைவரோ அன்றி பொருளாளரோ அற்ற நிலையில் தனிப்பட்ட ஒருவரின் நிதி பங்களிப்புடன் மட்டுமே நடைபெற்றாலும் கலந்து கொள்பவர்கள் மன்றத்திற்கு நிதி உதவி வழங்க முடியாது என்பதும் எவரும் மன்றத்தின் ரசீதில் கையொப்பம் இட தயாரில்லை என்பதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியது.

கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரால் ‘காரை ஒன்றுகூடல்’ நடைபெறாது என்பது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் முந்தைய நிர்வாகத்தை பயன்படுத்தி 21.08.2024 அன்று Morning Side Park booking செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் இலவசமாக கலந்து கொண்டு எம்மக்களோடு உறவாடலாம்.

More From Author

உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024

கனடா காரை கலாசார மன்றம் | 02.July.2024 செவ்வாய்கிழமை

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.