காரைநகர் ஊரி பகுதியில் கடந்த திங்கள் இரவு வீசிய சிறிய சூறாவழி காற்றினால் பனை மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்தது.
மூன்று பிள்ளைகளை உடைய கூலி தொழில் புரிந்துவரும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் மேற்படி குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தெய்வாதீனமாக இவர்கள் உயிர் பிழைத்துள்ள போதிலும் குடிசை வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் இப்பகுதி கிராம சேவகர் திரு.மயூரன் அவர்கள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அரச உதவியினை உடனடியாக பெற்றுக்கொடுக்க முடியாத சூழ்நிலையில், 2 வயது, 5 வயது, 9 வயது மூன்று குழந்தைகளின் நிலமை அறிந்தும் உடனடியாக இந்த குடிசை வீட்டினை மீள திருத்தியமைக்க ஊர் உறவுகளின் உதவியினை பெற்று நல்குமாறு ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதனை தொடர்பு கொண்டு அறியப்படுத்தியுள்ளனர்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர் திரு. பகீரதன் மற்றும் ஊரி பகுதி கிராம சேவகர் திரு.மயூரன் ஆகியோரது மேற்பார்வையில் உடனடியாக இந்த குடிசை வீடு மீளபுனரமைத்து வழங்கப்படவுள்ளது.
இதற்கான உங்களால் இயன்ற நிதியை காரைநகர் அபிவிருத்தி சபையினரை தொடர்பு கொண்டு வழங்கவும்.
கனடா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் ஆகிய என்னை தொடர்பு கொண்டால் உங்களது உதவி நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக பயனாளிகளிற்கு உடனடியாக வழங்கப்படுவதோடு உங்களது பெயரிலேயே காரைநகர் அபிவிருத்தி சபை ரசீதும் பெற்று வழங்கப்படும்.
கடந்த காலங்களை போன்று ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டு ஊர் நல்லுள்ளங்கள் வழங்கிய நிதி முழுவதும் வழங்கியவர்கள் பெயரிலேயே உரியவர்களிற்கு கிடைக்கும் வகையில் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாது ‘எனது ஊர் காரைநகர்’ தனிப்பட்டளவில் வழங்கும் நிதி மட்டுமே தீசன் திரவியநாதன் அல்லது ‘ எனது ஊர் காரைநகர்’ என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது என்பதும் அடுத்தவர்கள் கொடுக்கும் பணத்தில் ஒரு போதும் என் பெயரை பதித்து இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று என்பதுடன், எம்மூடாக வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தும் வழங்கியவர்கள் பெயர்கள் மற்றும் செயற்பாடு நிறைவு பெற்றதும் முழுமையான விபரங்கள் விளக்கமாகவும் விபரமாகவும் உதவிகளை வழங்கியவர்களுற்கும் பொதுவிலும் அறியப்படுத்தியும் உள்ளோம்.
இது ஒரு அவசர தேவை என்பதால் உடனடியாக செயற்பட்டு 01.07.2024 எதிர்வரும் திங்கள்கிழமைக்கு முன்னர் உங்களாலான உதவிகளை வழங்குங்கள்.
கீழே காரைநகர் அபிவிருத்தி சபையினரின் தொ.பே. இலக்கங்கள் தரப்பட்டுள்ளன. அல்லது கனடாவில் தீசன் திரவியநாதன் ஆகிய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.



நிதி வழங்குபவர்களின் பெயர், விபரம் உடனுக்குடன் அறியத்தரப்படும். என்றும் எப்போதும் வழமை போன்று எனது பங்களிப்புடன்..
| # | பெயர் | தொகை |
|---|---|---|
| 1 | தீசன் திரவியநாதன் | 25,000 ரூபா |
| 2 | தவச்செல்வன் திருஞானதியானேஸ்வரன் | $ 250 (USD) அல்லது 76,000 ரூபா |
| 3 | அருள் குலசேகரம் (இலண்டன்) | £ 200 (GBP) அல்லது 77,400 ரூபா |
| 4 | கோபாலகிருஷ்ணன் பேரம்பலம் | £ 100 (GBP) அல்லது 36,788 ரூபா |
| மொத்தம் பெறப்பட்டது | 215,188 ரூபா |









