நாள் : Tuesday, August 25, 2026
--:--:--
👁️
Awareness

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

அவர்களில் தனது ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வியை தாயகத்தில் கற்று கனடாவிற்கு இடம்பெயர்ந்த காரைநகர் பெரியமணலை சேர்ந்த திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் – டர்முதா தம்பதிகளின் மகள் செல்வி.நிருத்திகா செல்வநாயகம் கனடா ரொறன்ரோவில் தனது உயர்கல்வியை கற்று ஒன்ராரியோ மாநிலத்தின் கல்விக்கான உயரிய விருதினை பெற்று பொறியியல் துறையில் பல்கலைக்கழகம் சென்று தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, பொறியியல் துறையில் கலாநிதி பட்டத்தினை மேற்கொண்டு நிறைவு செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார் என்கிற செய்தி கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு பெருமை கொள்ள வைப்பதாகும்.

செல்வி.நிருத்திகா செல்வநாயகம் அவர்கள் கோபாலகிருஷ்ணன் சின்னத்துரை(சந்திரன், VS Co, France) அவர்களின் சகோதரியின் மகள் என்பதுடன் காரைநகர் நுழைவாயிலில் அமைந்துள்ள அலங்கார வழைவினை வடிவமைத்த திரு.செல்வநாயகம் செல்வரத்தினம் அவர்களின் மகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் காரை பெற்றோர்களின் பிள்ளைகள் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வியில் உச்சம் தொட்டிருந்தாலும் அதனை வெளிக்கொண்டு வருவதிலும், ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவதில் பின்நிற்கிறார்கள். அதற்கான காரணங்களில் கண்ணூறு என்கிற மூடநம்பிக்கையும், இடம்பெயர்ந்த நாடுகளில் அடிப்படை வேலைகள் புரிந்து வருவதால் ஊரிற்கான அபிவிருத்திகளில் ஒரு சதவிகிதமேனும் வழங்க முடியாத பல பெற்றோர்கள் இன்று தமது பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து கைநிறைய பணம் சம்பாதிக்கின்ற போதும் ஊரிற்கான உதவிகளை வழங்க மனம் இன்றி இன்னமும் பஞ்சம் கொட்டுவதிலேயே பழகிப்போய்விட்டார்கள்.

ஆனால் ஊரில் இருந்து இடம்பெயர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளும் தமது தாய் மண்ணாக காரை மண்ணை கருதுபவர்களல் மட்டுமே எங்களூர் காரை மண்ணையும் கெளரவிப்பார்கள் என்பதற்கு செல்வி.நிருத்திகா செல்வநாயகமும் அவருடைய பெற்றோர்களும் பெருமை கொள்ளவேண்டும். அவர்களிற்காக உங்கள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்.

வாழ்த்துவோம். இடம்பெயர்ந்தவர்களின் அடுத்த சந்ததியும் ஊரையும் மண்ணையும் நேசிக்கும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்

‘தன்வினை தன்னைச் சுடும்’ கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605