காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் பல நாடுகளிலும் கல்வியிலே சிறந்து விளங்குவதுடன் உச்சம் தொட்டு வருகிறார்கள்.

அவர்களில் தனது ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வியை தாயகத்தில் கற்று கனடாவிற்கு இடம்பெயர்ந்த காரைநகர் பெரியமணலை சேர்ந்த திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் – டர்முதா தம்பதிகளின் மகள் செல்வி.நிருத்திகா செல்வநாயகம் கனடா ரொறன்ரோவில் தனது உயர்கல்வியை கற்று ஒன்ராரியோ மாநிலத்தின் கல்விக்கான உயரிய விருதினை பெற்று பொறியியல் துறையில் பல்கலைக்கழகம் சென்று தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, பொறியியல் துறையில் கலாநிதி பட்டத்தினை மேற்கொண்டு நிறைவு செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார் என்கிற செய்தி கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு பெருமை கொள்ள வைப்பதாகும்.

செல்வி.நிருத்திகா செல்வநாயகம் அவர்கள் கோபாலகிருஷ்ணன் சின்னத்துரை(சந்திரன், VS Co, France) அவர்களின் சகோதரியின் மகள் என்பதுடன் காரைநகர் நுழைவாயிலில் அமைந்துள்ள அலங்கார வழைவினை வடிவமைத்த திரு.செல்வநாயகம் செல்வரத்தினம் அவர்களின் மகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் காரை பெற்றோர்களின் பிள்ளைகள் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வியில் உச்சம் தொட்டிருந்தாலும் அதனை வெளிக்கொண்டு வருவதிலும், ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துவதில் பின்நிற்கிறார்கள். அதற்கான காரணங்களில் கண்ணூறு என்கிற மூடநம்பிக்கையும், இடம்பெயர்ந்த நாடுகளில் அடிப்படை வேலைகள் புரிந்து வருவதால் ஊரிற்கான அபிவிருத்திகளில் ஒரு சதவிகிதமேனும் வழங்க முடியாத பல பெற்றோர்கள் இன்று தமது பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து கைநிறைய பணம் சம்பாதிக்கின்ற போதும் ஊரிற்கான உதவிகளை வழங்க மனம் இன்றி இன்னமும் பஞ்சம் கொட்டுவதிலேயே பழகிப்போய்விட்டார்கள்.

ஆனால் ஊரில் இருந்து இடம்பெயர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளும் தமது தாய் மண்ணாக காரை மண்ணை கருதுபவர்களல் மட்டுமே எங்களூர் காரை மண்ணையும் கெளரவிப்பார்கள் என்பதற்கு செல்வி.நிருத்திகா செல்வநாயகமும் அவருடைய பெற்றோர்களும் பெருமை கொள்ளவேண்டும். அவர்களிற்காக உங்கள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்.

வாழ்த்துவோம். இடம்பெயர்ந்தவர்களின் அடுத்த சந்ததியும் ஊரையும் மண்ணையும் நேசிக்கும்.

More From Author

12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.

காரைநகரில் இரண்டாம் நாள், அதே நேரம் தொடரும் கோடை மழை…03.05.2025

உதவி என்பது இன்னொருவர் கேட்டு செய்வதில்லை. உணர்ந்து கொண்டு செய்வது. சிறியதோ பெரியதோ… மனம் இருந்தால் தான் மார்க்கம் உண்டு.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.