காரைநகர் ஈழத்து சிதம்பரம் அண்டிய சடையாளி ஞானவைரவர் ஆலயம்

காரைநகர் ஈழத்து சிதம்பரம் அண்டிய சடையாளி ஞானவைரவர் ஆலயம்:

25 வருஷம் முடிந்தது. பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள்.

தீசன் திரவியதாதன் தான் எல்லாவற்றிற்கும் மணி கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கும் நான் தயார் தான். ஆனால் சம்பந்தமே இல்லாமலும் எதற்கும் இலாயக்கற்ற வகையிலும் சில சமூக வலையமைப்புக்களில் பொறாமை மட்டுமே காரணமாக கொண்டு இயங்கும் குழு WhatsApp குழுமங்களில் இருந்து கொண்டு அவர்களை ஊக்குவிப்பவர்களாக silent ஆக கூத்துப்பார்த்துக்கொண்டிருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளிற்கு ஆதரவு வளங்குவது இல்லை.

2011 இல் இந்த கோயிலின் கேணியை புனரமைத்து இன்றுள்ள நிலமைக்கு கொண்டுவர ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தீசன் திரவியநாதன் ஆகிய நான் பகீரதப்பிரயத்தனம் செய்து நிறைவேற்றினேன்.

ஆனால் அதற்குப்பின் ஆளாளுக்கு தாம் செய்ததாக பலரிடமும் பணம் பெற்றவர்கள் சிலர், இறுதியில் 2019ம் ஆண்டு கட்டி முடிந்த பின்னரும் 2 இலட்சம் கடன் உள்ளதாகவும் அதனால் மனவுளைச்சலில் இருப்பதாக கூறிய போதும் தனிப்பட்டளவில் அந்த இரண்டு இலட்சம் ரூபாய்களை கொடுத்து கணக்கை முடித்ததும் ‘எனது ஊர் காரைநகர்’ தான்.

அதனால் தான் ‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும்’

ஆரம்பித்து விட்டால் ஆளாளுக்கு காசு வேண்ட பலரும் முன்வருவார்கள்.

குறைந்த பட்சம் 5 பேர்கள் கொண்ட திருப்பணி சபையை ஆரம்பியுங்கள்.

மொத்த செலவு 50 இலட்சம். இந்த பகுதியை சேர்ந்த 50 பக்தர்கள் ஆளுக்கு ஒரு இலட்சம் வழங்க தயார். உங்களால் ஐந்து பேர்கள் கொண்ட திருப்பணி சபையை உருவாக்க நீங்கள் தயாரா…?

25 வருடமாக ஒரு கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இன்னுமா நீங்கள் ஆகம விதிகளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.

சடையாளி வைரவருக்கு கும்பாபிஷேகம். 50 பேரில் எனது பெயரும் சேர்த்துக்கொள்ளுங்கள். மிகுதி 49 பேர்களையும் நானே சேர்த்துக்கொள்கிறேன். திருப்பணிக்கான திருப்பணி சபையை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள்.

நான் தயார்…. நீங்கள் தயாரா…!

More From Author

யாழ்ப்பாணத்திலிருந்து கனடா வந்ததாக ஒருவர் fbஇல் தனது கதையை எழுதியிருந்தார். அவர் எழுதிய நோக்கமும் முடிவும் வேறாக இருந்தது ஆனால் அவருடைய நான்கு வருட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதில் பொய்யில்லை.

நீர்கொழும்பு நண்பன் பவானுடன்(மீசை கந்தசாமி) குடும்பத்துடன் 40 ஆண்டுகால பந்தம்…! ஊர்பற்றும் சிந்தனையும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் சேர்ந்தே பயணிக்கும்…!

யாழ்ப்பாணத்திலிருந்து கனடா வந்ததாக ஒருவர் fbஇல் தனது கதையை எழுதியிருந்தார். அவர் எழுதிய நோக்கமும் முடிவும் வேறாக இருந்தது ஆனால் அவருடைய நான்கு வருட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்பதில் பொய்யில்லை.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.