காரைநகர் இளைஞர், யுவதிகள் திடீர் விழிப்புணர்வு!| 2020

இளைஞர்களிற்கு விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்த தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியாக ஒரு இலட்சம் ஏக்கர் அரச காணிகளை இலவசமாக வழங்க முன்வந்தது.


அதற்காக 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்த இலவச காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறு விண்ணப்பங்களை கோரியிருந்தது. ஆனால் இந்த செய்திகளில் நம்பிக்கையின்மை மற்றும் அரசியல் தன்மைகள் கருதி பலரும் இந்த இலவச காணிகளை பெறுவதற்காக தமிழ் இளைஞர்கள் பலரும் இதற்காக விண்ணப்பிக்கவில்லை.


ஆனாலும் சிங்கள இளைஞர்கள் பலரும் விண்ணப்பித்திருந்தனர். தமிழ் இiளுஞர்கள் பலரும் இதற்காக விண்ணப்பிக்காத நிலையில் விண்ணப்ப முடிவு திகதியினை நவம்பர் 15, 2020 வரை காணி அமைச்சு நீடித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இலங்கை அரசு குடியேற்ற நடவடிக்கையை பின்னணியாக கொண்டு இந்த செயற்பாட்டினை முன்னெடுப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் செய்த பிரச்சாரம் மற்றும் ஊடகங்கள் ஊடாக பெறப்பட்ட செய்திகள் மூலமாக தமிழ் இளைஞர்கள் விழிப்படைந்து இன்று வெள்ளிக்கிழமை 13.11.2020 பல்லாயிரக்கணக்கான வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்கள் இந்த இலவச காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை வழங்கியுள்ளார்கள் என அறியப்படுகின்றது.

அரச அதிபர் செயலகங்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு காணி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில் காரைநகரில் மட்டும் 13.11.2020 இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயிரத்து ஐநூறு பேர்கள் வரையான காரைநகரைச் சேர்ந்த 45 வயதிற்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் இன்றுவரை விண்ணப்பித்துள்ளார்கள் என்ற விபரம் கிடைக்கப்பெற்றுள்ளது.


காரைநகரில் மட்டும் இந்தளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டம் முழுவதிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அரசின் இந்த திட்டம் எந்தளவில் செயற்படுத்தப்படவுள்ளது என்பதனை அறிய பலரும் ஆவலாக உள்ளார்கள்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெறாதோர் எண்ணிக்கை 60..! | 2020

காரைநகரின் புதிய வைத்திய அதிகாரி | 2020

Leave a Reply