மரண அறிவித்தல்
திரு. ஆறுமுகநாதன் மகாதேவன்
ஓய்வுபெற்ற அதிகாரி இலங்கை இறைவரி திணைக்களம்
நடுத்தெரு காரைநகர் (கனடா)
தோற்றம்: 29.04.1942 மறைவு: 18.05.2026
காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், கொழும்பு மொரட்டுவ, கனடா ஸ்காபுரோ, ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகநாதன் மகாதேவன் அவர்கள் கனடாவில் 18.05.2026 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகநாதன்(S.A.நாதன், முன்னாள் ஆங்கில ஆசிரியர் மானிப்பாய் Memorial College) அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கரம்பொனை சேர்ந்த கனகரத்தினம் சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவானந்தவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாணி, ஜானகி, ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சிரேஸ்ட செயலாளர் இலங்கை வர்த்தக அமைச்சகம், சட்டத்தரணி), A.நடராசா(முன்னாள் அதிபர், காரை இந்துக்கல்லூரி, வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்), கனகாம்பிகை, ஞானாம்பிகை, அகிலாம்பிகை, குமாரசாமி(Agriculture Department, Peradeniya) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, பரஞ்சோதி, பேரம்பலம், திரவியநாதன், கருணாகரன் மற்றும் சிவமணி, இரத்தினேஸ்வரி, சிவசோதி, சச்சிதானந்தன்(அவுஸ்திரேலியா), பரிமளசோதி, சதானந்தன்(நியூசிலாந்து), சிவநேசம், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி, அஸ்வின், அனுசிவன், அஞ்சனா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20.05.2026 புதன்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை 8911 Woodbine Ave. இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
மறுநாள் 21.05.2026 வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் 3.30 மணி வரை கிரியைகள் நடை பெற்று 12492 Woodbine Ave இல் அமைந்துள்ள Highland Hills Funerals Home and Cemetery இல் தகனம் செய்யப்படும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்.
தொடர்புகளிற்கு: மகள் ஜானகி, பிரதீபன்

+ 1 416 830 2700, + 1 416 230 1810.



