வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்…
காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.
அன்னாரது குடும்பத்தினர் ஊரிற்கும் ஊர் மக்களிற்கும் செயற்கரிய பெரும் செயற்பாடுகளை தமது தாய் தந்தையர் வழியாக கடந்த பல தசாப்தங்களாக நிறைவேற்றி வருகின்றனர். அன்போடும் ஊர் மக்களை அரவணைத்தும் புன்முறுவலோடு உயிர்களிடத்து கருணையோடு பழகிய தமது தந்தையாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பரிபூரண நிம்மதி பெருவாழ்வு பெறபிரார்த்திக்கவும் அன்புடன் அழைக்கின்றனர் அன்னாரின் குடும்பத்தினர்.

முடிந்தவரை அனைவருக்கும் அழைப்புக்கள் விடுத்திருக்கின்ற போதிலும்தயவு செய்து தமக்கென தனிப்பட்ட அழைப்பு வரவில்லையென எவரும் கருதாமல் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் குடும்பத்தினர் அழைக்கின்றனர்.



