காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.

காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.

இற்றைக்கு இரண்டு தலைமுறைகளிற்கு முன்னர் வரை கேட்டு அறிந்து கொண்டது யாதெனில் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ காலங்களில் இரவு திருவிழாக்களின் போது வெளியூர் மேளங்கள், இந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள், சின்னமேளம் எனப்படும் வாத்திய இசை என்பனவும் கேளிக்கை நிகழ்வுகளும் நடைபெற்று வந்துள்ளன. அப்போதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்தன.

அதே போல் தற்போதைய சூழ்நிலையிலும் ஆகமங்கள், வழிபாட்டு முறைகளை கற்றுத்தேர்ந்து தனிய பக்தியுடன் கோயிலுக்கு சென்று வழிபடுபவர்களின் எண்ணிக்கை அரிதாகிவிட்டாலும், மக்களை கோயிலுக்கு வரவழைக்கும் பொருட்டு கலைநிகழ்வுகள், வானவேடிக்கை, கேளிக்கை நிகழ்வுகளையும் நடாத்த வேண்டிய சூழ்நிலை அன்று முதல் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் சில மேதாவிகள் கோயில்களில் செலவு செய்யப்படும் நிதி மற்றும் கோயில்களிற்கு மக்களை வரவழைக்க செய்யப்படும் கலைநிகழ்வுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

அரசும் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டிய மக்களிற்கான செயற்பாடுகளை கோயில்கள் செய்தால் என்ன…வென்று அதிபுத்திசாலித்தனமாக தம்மை புனிதர்களாக கருதும் பலரும் வெளிநாடுகளில் தமது உழைப்பிற்கும் மேலாக காரும்(car) வீடும் வேண்டியவர்கள், தமதுசொந்த உறவுகளிற்கு உதவ முடியாதளவில் அர்த்தராத்திரியில் வெளிநாடுகளில் குடை பிடிக்கும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

கோயிலுக்கு வாருங்கோ. அல்லது நீங்கள் நினைப்பது போன்று சாப்பாட்டுக்கு பதிலாக சத்து மாத்திரைகள் வேண்டி காலை, மாலை, இரவு உணவுக்காக சாப்பிட முடிந்தால் அதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ முடிகின்ற போது கோயில்களிலும் தனிய பக்தியை மட்டும் வளர்க்கும் இடமாக மாற்றலாம்.

அதுவரை காலத்திற்கு ஏற்ப, வசதிகளிற்கு ஏற்ப கோயில்களிலும் கலைநிகழ்வுகளும் வெளியூர் மற்றும் வெளிநாட்டவர்களின் நிகழ்வுகளும் நடைபெறுவதில் குறையேதும் சொல்வதற்கில்லை…. அதற்காக அதிக புடுங்கியாக அப்படியாயின் கோயிலில் ‘பைலா’ அல்லது ‘டிஸ்கோ’ நிகழ்வுகளும் நடாத்துவதில் தப்பில்லையா…? என்று கேட்க உங்களிற்கு தோன்றினால் உங்களிற்கு மேலே நான் சொல்ல வந்த விடயம் விளங்கவில்லை என்பதுடன் ஏதாவது ஒரு கோயிலுக்கு கடைசியா நீங்கள் எப்போது சென்றீர்கள் என்று யோசியுங்கள்.

அத்துடன் மக்கள் மேல் அக்கறை இருந்தால் உங்களது பிரிவில் உள்ள பராளுமன்ற உறுப்பினரை உடனடியாக தொடர்பு கொண்டு மக்களிற்கான நீங்கள் விரும்பும் பணியை சிபார்சு செய்க.

நன்றி.

More From Author

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம், கும்பாபிஷேக கிரியைகள் மூன்றாம் நாள் 23.03.2026

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள். நான்காம் நாள். எண்ணைக்காப்பு காட்சிகளின் பின்னர் யாக குண்ட பூசை காட்சி, எழுந்தருளி விக்கிரகங்களிற்கு கீர்த்தனையுடன் அபிஷேகம். 24.03.2025.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.