நாள் : Friday, August 28, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.

காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.

இற்றைக்கு இரண்டு தலைமுறைகளிற்கு முன்னர் வரை கேட்டு அறிந்து கொண்டது யாதெனில் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ காலங்களில் இரவு திருவிழாக்களின் போது வெளியூர் மேளங்கள், இந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள், சின்னமேளம் எனப்படும் வாத்திய இசை என்பனவும் கேளிக்கை நிகழ்வுகளும் நடைபெற்று வந்துள்ளன. அப்போதும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்தன.

அதே போல் தற்போதைய சூழ்நிலையிலும் ஆகமங்கள், வழிபாட்டு முறைகளை கற்றுத்தேர்ந்து தனிய பக்தியுடன் கோயிலுக்கு சென்று வழிபடுபவர்களின் எண்ணிக்கை அரிதாகிவிட்டாலும், மக்களை கோயிலுக்கு வரவழைக்கும் பொருட்டு கலைநிகழ்வுகள், வானவேடிக்கை, கேளிக்கை நிகழ்வுகளையும் நடாத்த வேண்டிய சூழ்நிலை அன்று முதல் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் சில மேதாவிகள் கோயில்களில் செலவு செய்யப்படும் நிதி மற்றும் கோயில்களிற்கு மக்களை வரவழைக்க செய்யப்படும் கலைநிகழ்வுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

அரசும் அரசியல்வாதிகளும் செய்ய வேண்டிய மக்களிற்கான செயற்பாடுகளை கோயில்கள் செய்தால் என்ன…வென்று அதிபுத்திசாலித்தனமாக தம்மை புனிதர்களாக கருதும் பலரும் வெளிநாடுகளில் தமது உழைப்பிற்கும் மேலாக காரும்(car) வீடும் வேண்டியவர்கள், தமதுசொந்த உறவுகளிற்கு உதவ முடியாதளவில் அர்த்தராத்திரியில் வெளிநாடுகளில் குடை பிடிக்கும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

கோயிலுக்கு வாருங்கோ. அல்லது நீங்கள் நினைப்பது போன்று சாப்பாட்டுக்கு பதிலாக சத்து மாத்திரைகள் வேண்டி காலை, மாலை, இரவு உணவுக்காக சாப்பிட முடிந்தால் அதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ முடிகின்ற போது கோயில்களிலும் தனிய பக்தியை மட்டும் வளர்க்கும் இடமாக மாற்றலாம்.

அதுவரை காலத்திற்கு ஏற்ப, வசதிகளிற்கு ஏற்ப கோயில்களிலும் கலைநிகழ்வுகளும் வெளியூர் மற்றும் வெளிநாட்டவர்களின் நிகழ்வுகளும் நடைபெறுவதில் குறையேதும் சொல்வதற்கில்லை…. அதற்காக அதிக புடுங்கியாக அப்படியாயின் கோயிலில் ‘பைலா’ அல்லது ‘டிஸ்கோ’ நிகழ்வுகளும் நடாத்துவதில் தப்பில்லையா…? என்று கேட்க உங்களிற்கு தோன்றினால் உங்களிற்கு மேலே நான் சொல்ல வந்த விடயம் விளங்கவில்லை என்பதுடன் ஏதாவது ஒரு கோயிலுக்கு கடைசியா நீங்கள் எப்போது சென்றீர்கள் என்று யோசியுங்கள்.

அத்துடன் மக்கள் மேல் அக்கறை இருந்தால் உங்களது பிரிவில் உள்ள பராளுமன்ற உறுப்பினரை உடனடியாக தொடர்பு கொண்டு மக்களிற்கான நீங்கள் விரும்பும் பணியை சிபார்சு செய்க.

நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605