Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்
பயிரிக்கூடல், காரைநகர்

காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், கந்தசாமியின் (இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு) அன்புத் தந்தையும், லீலாவதியின் அன்புத் தம்பியும், தயாநிதி, கணநாதன் (மாநகர சபை, கொழும்பு) கேதாரிநாதன் (ஆசிரியர், கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் பயிரிக்கூடல் இல்லத்தில் 22.12.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப் படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

கந்தசாமி – மகன் – 077 3143618
கணநாதன் – மருமகன் – 077 9522084
கேதாரிநாதன் – மருமகன் – 077 4146125

தகவல்: குடும்பத்தினர்
பயிரிக்கூடல், காரைநகர்

Leave a Reply