Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை | மறைவு: 16.06.2013

ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை
நீலிப்பந்தனை, காரைநகர்

மறைவு: 16.06.2013
காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 16.06.2013
அன்று காரைநகரில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஒப்பிலாமணி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், பொன்னுத்துரை மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும், பாலசரஸ்வதியின் அன்பு கணவரும் திருமதி புவனேஸ்வரி கணபதிப்பிள்ளை, பாலசிங்கம், காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(கனடா), சோதீஸ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும், மகாலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாத்வீகன், சானுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் காரைநகர் கோவளம் இல்லத்தில் 20.06.2013 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல்
தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
கோவளம், காரைநகர்

Leave a Reply