யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி ‘கார்ப்பெற் வீதி’ அங்கொன்றும் இங்கொன்றுமாக….! |18.Mar.2021
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் செல்லும் கல்லுண்டாய் வீதியினை பொன்னாலை சந்தி வரையிலான கார்ப்பெற் வீதியாக புனரமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.








இந்த நிலையில் இதற்கான பணிகள் மந்த கதியில் ஈடுபட்டு வந்துள்ளதும் அதற்கான காரணங்களில் ஒன்றாக ஆட்சி மாற்றம் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டாலும் தற்போது யாழில் இருந்து பொன்னாலை சந்தி வரையான இப்பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டுகளாக கார்ப்பெற் வீதி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இன்னும் சில இடங்களில் வீதி அகலிப்பு கூட நடைமுறைப்படுத்தப் படவில்லையெனவும், சில இடங்களில் கார்ப்பெற் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் அறியப்படுகின்றது.
இந்த நிலையில் 18.03.2021 அன்று ‘எனது ஊர் காரைநகர்’ இற்காக பிரத்தியேகமாக புகைப்படமாக்கப்பட்டுள்ள சில பகுதிகளை கீழ்வரும் புகைப்படங்கள் ஊடாக காணலாம்.

Leave a Reply
You must be logged in to post a comment.