சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்
இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012
தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது.
அமரர் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் 12.08.1952ம் ஆண்டு காரைநகரில் பிறந்து முதலாவது பொறியியல் பட்டதாரியாக காரைநகரிற்கு பெருமை சேர்த்தவர். இவர் பொறியியலாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்று ஒரு மாத காலத்தினுள் 15.05.1975ம் ஆண்டு தனது 23வது வயதில் விபத்து ஒன்றில் அகலா மரணத்தை தழுவிக்கொண்டார். அன்னாரது நினைவாக புதுறோட்டு வாழ் இளைஞர்கள் இம்மண்டபத்தினை கட்டுவித்து வழங்கியுள்ளார்கள்.




















