“காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் வருக..!

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மண்ணிற்கும் மக்களிற்கும் சேவையாற்றுபவர்களை கெளரவிப்போம். கல்விக்கு முன்னுரிமை அளிப்போம்.

காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிற்கான விசேட ஊக்குவிப்பு பணப்பரிசில்கள், காரைநகர் மாணவர் நூலகத்தை அதிகம் பயன்படுத்திவரும் மாணவர்களிற்கான ஊக்குவிப்பு பரிசுகள் மற்றும் ஊரையும் உறவுகளையும் ஒன்றிணைக்கும் உன்னதமான நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கும் நிகழ்வு.

மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே. நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகி குறிப்பிட்ட நேரத்தில் நிறைவுறும். மாலை 3 மணிக்கு முன்னர் வருகை தரும் 50 பார்வையாளர்களிற்கு அதிஸ்டம் மூலம் பணப்பரிசில்களும் வழங்கப்படும்.

திருவெம்பாவை உற்சவ காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, இவ்வாண்டு இரண்டாம் நாள் திருவெம்பாவை காலத்தில் அமைந்துள்ளது.

உயிர்காத்து, பொருள்தேட உலகெலாம் பரந்து வாழும் காரை மக்கள் ஊர் திரும்பும் ‘அடையும் காலம்’ மார்கழி திருவாதிரை’ காலம். ஊரையும் மண்ணையும் மக்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கும் மண்ணின் சேவையாளர்களை மதிப்பளித்து கெளரவிக்கும் விழா. அனைவரும் வருக.

இதுவரை கடந்த மூன்று சேவையாளர்கள் கெளரவத்தின் போது 37 சேவையாளர்கள் மதிப்பளித்து கெளரவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நான்கு சேவையாளர்கள் 05.01.2025 அன்று கெளரவம் பெறுகிறார்கள். 29வது இதழ் ‘எனது ஊர் காரைநகர்’ வெளியீட்டுடன் ஊர் நினைவுகளுடன் இன்னும் அறிந்து கொள்ள நீங்களும் நீங்கள் அறிந்தவர்களையும் அழைத்து வாருங்கள்.

(இது எல்லோரிற்குமான பொது அறிவித்தல், தனிப்பட்ட அழைப்பு வழங்கப்படமாட்டாது). நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

நாங்களும் அந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.

2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார்கள்.

Leave a Reply