நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Appreciation

2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப் படவுள்ளார்கள்.

05.01.2025 அன்று காரைநகரில் நடைபெறவுள்ள சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வின் போது 2023/2024 இந்த வருடம் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களான 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்கள்.

காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று 5A க்கும் கூடுதலான பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் தங்கள் பெயர் விபரங்களை 04.01.2025 க்கு முன்னர் எனக்கு அனுப்பி வைக்கவும்.

காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் எம்மோடு ஒத்துழைப்பு வழங்கி மாணவர்களது பெயர் விபரங்களை தந்து உதவியதுடன் மாணவர்களது புகைப்படத்துடன் கூடியளவு ‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகையில் விபரம் வெளிவர ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் மற்றைய பாடசாலை அதிபர்கள் அதற்கான ஒத்துழைப்பை வழங்க மறுத்துள்ளார்கள் அல்லது கவனத்தில் கொள்வதில்லை.

கெளரவம் பெறும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது கலந்து கொள்வது கட்டாயமாகும்.

வெளிநாடுகளில் இருந்து பலரும் பகட்டிற்காகவும் தமது பெயர் விளங்கவும் உதவிகளை வழங்கவும் படம் காட்டவும் நிகழ்வுகளை நடாத்தினாலும் ‘எனது ஊர் காரைநகர்’ என்றும் எப்போதும் காரை மாணவர்களது கல்வியை மேம்படுத்தவும் தேவை ஏற்படுபவர்களிற்கு தேவையான உதவிகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.

கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி தேவையுள்ள மாணவர்களிற்கு ரியூசன் வகுப்புகளிற்கான உதவிகள், கல்விக்கான உதவிகளை தனிப்பட்டளவிலும் மற்றைய தர்ம நோக்கம் கொண்ட வெளிநாடுகள் வாழ் அன்பர்கள் ஊடாகவும் நிறைவேற்றி வருகின்றது.

ஊர் மன்றங்கள் பலவும் நிர்வாகங்களை பொறுத்து நிரந்தரமற்ற முறையில் கல்விக்கான உதவிகளை அவ்வப்போது செய்து வருகின்றன.

கனடா காரை கலாசார மன்றம் உட்பட சில ஊர் அமைப்புக்கள் செயலிளந்துள்ளதுடன் அவர்களால் கல்விக்கான உதவி வழங்கப்பட்ட மாணவர்களும் நடுக்காட்டில் விடப்படப்பட்டுள்ளனர். அதற்கு உறுதுணையாக காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாக திறன் அற்ற நிலையில் செயலிளந்து பதிலளிக்க முடியாத நிலையில் தனிப்பட்ட ஒரு சிலரின் பிரச்சனைகளிற்குள் சிக்குண்டு செயலிழந்துள்ளனர்.

‘எனது ஊர் காரைநகர்’ என்றும் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளையும் எடுத்த செயற்பாடுகளையும் கடந்த 18 ஆண்டுகளாக சொல்லும் செயலும் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது.

05.01.2025 நடைபெறவுள்ள காரைநகர் சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது கலந்து கொள்வதன் ஊடாக பலவித தகவல்களை பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி தொடர்பாக பெறுவார்கள் என்பதுடன் பணத்திற்காக மட்டுமன்றி ஊரும் வெளியுலகும் கொண்டுள்ள தொடர்புகளை வலுப்பெற வைக்கும். அதனை காரணங்கள் எதுவும் கூறாமல் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது ‘எனது ஊர் காரைநகர்’

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605