நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

நாங்களும் அந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.

(வாசியங்கோ… முதல் பந்தியுடன் நின்று விடாதீர்கள்… உள்ளே உங்களிற்கு தேவையான விடயம் உள்ளது..)…

நாங்களும் அந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.

ஆனால்… வெளிநாடுகளிற்கு வந்து குடியேறினாலும் பிறந்ததும், வளர்ந்ததும், கற்றதும், அந்த மண்ணில் தான்.

ஆனால் குடியேறிய நாடுகளில் நாங்கள் குடியுரிமை என்னும் பெயரில் பல நாடுகளிற்கும் செல்லும் passport ஐ பெற்றுக்கொண்டோம். அதனால் நாங்கள் சொந்த நாட்டிற்கே சுற்றுலா பயணிகளாக செல்ல வேண்டிய நிலை.

சுற்றுலா பயணிகள் என்ற ‘Tourist Visa’ என்கிற அனுமதியோடு அந்த நாட்டிற்குள் செல்கின்ற போது அனைத்து மற்றைய நாட்டு மக்களைப்போல் தான் எங்களிற்கும் சட்டமும் சம்பிரதாயமும்…. ஆனால் … ஆனால்…அந்த நாட்டில் பிறந்திருந்தால், அந்த நாட்டின் பிறப்பு சான்றிதள் இருந்தால் நாங்களும் 99% விகிதமான அந்த நாட்டு பிரஜைகளிற்குரிய அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறவும், நாம் பிறந்து வளர்ந்த ஊரிலும், நாட்டிலும் அனைத்தையும் சட்டப்படி செய்வதற்கும் நடப்பதற்கும் ‘Permanent resident visa’ (PR) அனுமதி வளங்குகிறது.

இலங்கையில் பிறந்த ஒருவர் online மூலமாக PR பெற்றுக்கொள்ள முடியாது. Tourist Visa மூலம் இலங்கை சென்று தமது பிறப்பு சான்றிதள் உட்பட அனைத்தையும் வளங்கி ஒரே நாளில் அந்த நாட்டின் PR பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற பலர் தமது முன்னைய கடந்த கால இலங்கை தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாகன ஓட்டுனர் அனுமதி பத்திரம் முதல், வங்கி கணக்குகள் வரை பெற்று வருகிறார்கள். அது சட்டத்திற்கு புறம்பானது என்பது பலருக்கும் தெரியாது அல்லது தெரிந்தும் செய்து கொண்டு வருகிறார்கள்.

இன்னொரு நாட்டின் பிரஜையாக இருந்து கொண்டு இலங்கை நாட்டின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்துவது மிகப்பெரும் பாரதூரமான குற்றமாகும். ஆனாலும் இதனை அறியாமலும் அறிந்தும் பல அரச திணைக்கழங்களிலும் வங்கிகளிலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர் என தெரிந்தும் இலங்கையின் தேசிய அடையாள அட்டையை ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம் வழங்கும் tourist visa எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதனையும், tourist visa வில் செல்பவர்கள் இலங்கையில் என்ன செய்யலாம்… என்ன செய்ய கூடாது என்பது பற்றி visa agreement சென்று வாசித்து அறிந்து கொண்டீர்களேயானால் இலங்கையில் பிறந்தவர்கள் நிச்சயமாக அந்த நாட்டின் PR இனை பெற்றுக்கொண்ட பின்னரே அங்கு வங்கி கணக்கு ஆரம்பிக்கவும், அங்கு வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதும், ஊரில் சொத்துக்கள் வாங்குவதும், ஊரில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வதும், சட்டப்படி சாத்தியமாகும் என்பதும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது.

உதாரணமாக கனடா காரை கலாசார மன்றம் உண்மையை சொல்லி இலங்கையில் ‘கனடா காரை கலாசார மன்றத்த்தின்’ பெயரில் வங்கி கணக்கு திறந்து 65 இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு வங்கி வட்டியை பெற்று வருகிறது. வெளிநாட்டு கணக்கு என்பதால் 7% வட்டி வழங்கி, அதில் 3 % திரும்பவும் வெளிநாட்டு வரி மூலம் திரும்ப பெறுகிறது. குத்து மதிப்பாக பார்த்தால் 65 இலட்சம் ரூபாய்களிற்கு வெறும் 15,000 ரூபா மட்டுமே மாதாந்தம் பெற்று வருகிறது.

ஆனால் கடந்த வருடம் 50 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் நூலக மாணவர்களை ஊக்குவிக்க அந்த நாட்டின் நிரந்தர பிரஜையாக(PR) பெற்று என்னால் வைப்பில் இடப்பட்ட தொகைக்கு அன்றைய வட்டி விகிதமாக வழங்கப்பட்ட 14% வட்டியாக மாதாந்தம் 65,000 ரூபா வரை அனைத்து வகையிலும் சட்ட பூர்வமாக, இன்று என்னால் வெளிப்படையாக சொல்ல கூடியளவில் வங்கி வளங்கி வருகிறது.

கனடா காரை கலாசார மன்றம் அந்த நிதியை காரைநகர் அபிவிருத்தி சபைக்கு வழங்கி அதனை கடந்த நான்கு வருடமாக வைப்பில் இட்டிருந்தால் 2022 இல் 23% வீத வட்டியும் தொடர்ந்து 15% க்கும் கூடிதலான வட்டியையும் பெற்று கடந்த நான்கு வருடத்தில் மட்டும் 30 இலட்சம் ரூபாய்கள் வட்டியாக பெற்றிருக்க முடியும்.

‘தானும் தின்னாது, தள்ளியும் நில்லாது’ என்கிற பழமொழிக்கு இணங்க இன்றும் கனடா காரை கலாசார மன்றத்தின் 65 இலட்சம் ரூபாய்கள் பணம் எலிப்புழுக்கை எதற்காக காய்கிறது என்று தெரியாமல் காய்வது போல் காய்ந்து கொண்டிருக்கிறது. காரணம் ஊரிற்கென சேர்த்த பணத்தில் இன்னமும் தங்கள் பெயர் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் காரணம்.

இதுவே 2015 இல் ஊரிற்கெனவும் ஊரின் பாடசாலைகளிற்கெனவும் சேர்த்த பணத்தை ஊரில் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வழங்கியதால் பத்து வருடத்தில் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை வட்டியாக பெற்றுள்ளதுடன், வைப்பில் இட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் பத்திரமாக இன்னும் பல தசாப்தங்களிற்கு பாடசாலைகளிற்கான உதவியை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கப் போகிறது.

வெளிநாடுகளில் இருந்து சென்றவர்களின் வரிசையில் இரட்டை பிரஜா உரிமை பெறாத நிலையில் இலங்கையின் பிரஜைகள் பெறுகின்ற அனைத்து உரிமைகளையும்(ஒன்றை தவிர), வங்கி கணக்கில் கனடிய passport இலக்கம் போட்டு சட்ட ரீதியாக வங்கி கணக்கு திறந்திருப்பதும், கனடிய பிரஜையாக இருந்து கொண்டு நான் பிறந்த நாட்டிலும் பிறந்த ஊரிலும், குடியுரிமை பெற்ற கனடா நாட்டிற்கும் உண்மையாகவே இருக்கிறேன். இருப்பேன்.

இலங்கையில் பிறந்து இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவரால் இலங்கையில் சென்று அரசியலில் வேட்பாளராக களம் இறங்கவோ அல்லது போட்டியிடவோ மட்டும் தான் தகுதி இல்லை, அதனை தவிர்த்து அனைத்து வகையிலும் இலங்கையில் பிறந்து பின்னர் அந்த நாட்டின் PR பெற்ற ஒருவரிற்கு இலங்கை பிரஜைக்குரிய உரிமைகளும் உண்டு என்பதனை இதுவரை தெரியாது இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள். எது செய்தாலும் உண்மையாகவும் சட்ட ரீதியாகவும் செய்வோம், செயற்படுவோம்.

– எனது ஊர் காரைநகர்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605