எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

பொதுப்பணிகள் பொது அமைப்புக்களின் ஊடாக நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததும் ஒற்றுமையின் பலமும் ஆகும். அதனை கருத்தில் கொண்டு காரைநகர் அபிவிருத்தி சபையின் 28.09.2025 அன்று தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகசபையினரின் கவனத்திற்கு சடையாளி கேணி தொடர்பான விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக தமது பணிகளை நடைமுறைப்படுத்த காரைநகர் பிரதேச செயலகத்தின் அனுமதிக்காக இன்னமும் பொறுமையுடன் காத்திருக்கும் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் உத்தியோக பற்றற்ற வகையில் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுவதையும் இதற்காக பொதுமக்கள் வளங்கும் நிதி மற்றும் செலவீனங்களை உறுதிப்படுத்தி உத்தரவாதம் வளங்குமாறு ‘எனது ஊர் காரைநகர்’ கேட்டுக்கொள்கிறது.

இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும் நிதி உதவி வளங்க முன்வருபவர்கள் தொடர்பு கொள்ளவும். இப்பணிக்கு மேலதிகமாக பெறப்படும் நிதி மற்றும் செலவு விபரங்கள் உத்தியோக பற்றற்ற வகையில் காரைநகர் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் எனவும் மேலதிக நிதி காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் இதுபோன்ற சேவைகளிற்காக கையளிக்கப்படும் என்பதையும் தயவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

1. தீசன் திரவியநாதன்(கனடா): 10,000 ரூபா

2. வேலுப்பிள்ளை ஈசன்(பிரான்ஸ்): 20,000 ரூபா

3. ஆறுமுகம் செந்தில்நாதன்(சுவிஸ்): 10,000 ரூபா

4. நடராசா லோகன்(இலண்டன்): 10,000 ரூபா

5.

6.

7.

8.

9.

தயவு செய்து பார்வையாளர்களாக கலந்து கொண்டு கேணி இறைப்பது இப்படித்தான் என்று நீங்களும் உங்கள் பிள்ளைகளிற்கும் கற்றுக்கொடுங்கள்.

பெரியவர்கள் வேலைப்பழு, மனவுழைச்சல், விடிய காலை 7 மணிக்கு எழும்புவது சிரமம் என்ற காரணங்கள் உங்களிற்கு இருந்தாலும், 2009 க்கு பின்னர் பிறந்த பிள்ளைகளிற்கு இப்படித்தான் 1990 களிற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து பணம் வராமல் இருந்த காலத்தில் வீட்டுக்கு பத்து ரூபா போட்டும், ஆளுக்கு இரண்டு கைகள் கொடுத்தும் இறைத்தோம், இறைத்த கேணியில் நாளுக்கு ஒருதரம் மூழ்கி எழுந்தோம் என்றும் காட்டிக்கொடுங்கள்.

இறைத்த பின்னர் கேணியே கெட்டுப்போனாலும் பரவாயில்லை எவரையும் மூழ்கி எழ விடமாட்டோம் என்று விளம்பர பலகை போடுவதற்கு தடை விதிக்கப்படவேண்டும். பழமைகளில் இருந்து விடுபடுவோம். கடந்த காலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். முறையாகவும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் ஆடையணிந்து நீராடும் அனைவரையும் அனுமதி வழங்கி கேணியின் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதன் ஊடாக மட்டுமே கேணியும் தன்னை தானே சுத்திகரித்துக்கொள்ளும். அசையாது நிற்கின்ற பெரும் நீர் பாசிகளாலும் பக்றீரியாக்களினாலும் தானாகவே கெட்டுப்போய்விடுகிறது என்ற விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்வோம்.

குளிப்பதால் கெட்டுப்போகாது பெரும் நீர் என்பதையும் கூட்டம் கூட்டமாக ஐம்பதும் நூறுமாக தினம் தினம் கேணியில் குளித்து எழுந்த பரம்பரை கேணியையும் சுத்தமாக்கி தங்களையும் சுத்தமாக்கி வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை கற்றுக்கொடுங்கள்.

பி.கு: காரைநகரில் பல கேணிகளில் குளிப்பதற்கு தடை என்ற பலகை போடப்பட்டதற்கான காரணங்களை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. உங்கள் வீட்டிற்குள் எந்த வரைமுறைகளையும் கடைப்பிடியுங்கள். பொதுவில் எல்லோரிற்கும் எல்லாமும் உண்டு.

அன்பே சிவம்.

More From Author

எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை

12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.