Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் | இறப்பு: 09.04.2012

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம்
கதிர்காமசுவாமி கோயிலடி, காரைநகர்
(பலாலி வீதி, யாழ்ப்பாணம்)

பிறப்பு: 16.10.1925 இறப்பு: 09.04.2012

காரைநகர் கதிர்காமசுவாமி கோயிலடியை பிறப்பிடமாகவும், 281-பலாலி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) 09.04..2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை காரை இந்து, பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்க பொருளாளர்), அம்பிகாதேவி(தமிழ்துறை, யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற கமலநாயகி (சுருக்கெழுத்தாளர், நீதிமன்றம் ஊர்காவற்றுறை), ஆனந்தகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடனகுமார், வசந்தநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும், துரைராசசிங்கம், இராசரத்தினம், கலாவதி
ஆகியோரின் அன்பு மாமனாரும், சுவாதி, பாரதி, ரஞ்சன்குமார், துளசி, பவித்திரன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2012 வியாழக்கிழமை மு.ப.9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவி;த்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் – 94 21 222 4068

Leave a Reply