Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012

தில்லையம்பலம் இரத்தினசபாபதி
(கார்க்கார அப்பச்சி)
பண்டித்தாழ்வு, காரைநகர்

சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும், பண்டித்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இரத்தினசபாவதி 14.04.2012
சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும், நாகேஸ்வரியின் அன்புக்
கணவரும், சொர்ணரூபி(இந்தியா), சொர்ணறஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், சுரேஸ்குமார்(இந்தியா),
புஸ்பகலா, சந்திரன், சந்திரா, பவா, றஞ்சன், ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அஸ்வந், சங்கீதா, சரணியா ஆகியோரின்
அன்புப் பேரனும், நாகரத்தினம்(இளைப்பாறிய தொலைத்தொடர்பு திணைக்கள உத்தியோகத்தர்), இராசரத்தினம்(ராசன்)
ஆகியோரின் அன்புச் சகோதரனும், பத்மநாதன்(இளைப்பாறிய ப.நோ.கூ.சங்க பணியாளர்), புஸ்பராணி, கோகிலவல்லி,
கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும், ராஜ்குமார், ராஜினி, இராஜேஸ்வரி, துஸ்யந்தி ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்
தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார்
உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் – பண்டித்தாழ்வு காரைநகர்

Leave a Reply