Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்
(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு
வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள் 09.10.2013 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை லட்சுமிப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் (ஓய்வு பெற்ற கட்டிடதிணைக்கள அதிகாரி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவபாலன் (பொறியியலாளர் – UK), Dr.அனுஷா (விரிவுரையாளர்-UK) ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr.சந்தியா (UK) Dr.ராகவன் (UK), ஆகியோரின் அன்பு மாமியாரும், நிதிபன்சாயி, வைஷ்ணவி,ஹரிகிருஷ்ணா, ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற பார்வதி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் சிவபாக்கியம், அன்னலட்சுமி, கருணைலிங்கம்,திலகவதி, சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் (591 காலி வீதி,கல்கிசை) சனிக்கிழமை 12.10.2013 காலை 9.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 13.10.2013 பிற்பகல் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது
மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :Dr (Mrs) R.அனுஷா(மகள்)


Leave a Reply