Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

கனகலிங்கம் சுதர்சன்
பலகாடு, காரைநகர்
(கிளிநொச்சி)
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்
சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி
மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.

அன்னார் சுப்பிரமணியம் கனகலிங்கம்(தொப்பி மாமா) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும் சுதர்சினி, சுபாசினி, சுகந்;தினி, சுஜீவினி
ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 19.09.2012 காலை 11 மணிக்க வேலூர் இந்து மயானத்தில் இந்து சமய முறைப்படி நடைபெறும்.

அத்துடன் குடும்பத்தினர் இலங்கை திரும்பியதும் அவரது கிளிநொச்சி இல்லத்தில் வலயக் கல்விப்பணிமனையினரால் அஞ்சலிக்கூட்டமும்
நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாகறு கேட்டக் கொள்ளப்படுகின்றார்கள்.

முக்கிய குறிப்பு:
அன்னாரது சிகிச்சைக் காலத்தில் இறுதிநேர இக்கட்டான தருணங்களில் மனமுவந்து அனைத்து வழிகழிலும் பண உதவிகள்
ஒத்துழைப்புக்கள், ஆறுதல்கள், இறை ஆசீர்வாங்கள், மருத்துவ சேவைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றோம்.

தகவல்:
கனகலிங்கம் புவனேஸ்வரி(தாய்)
தொலைபேசி இலக்கம் : இந்தியா – 91 9677 1694 07
இலங்கை – 94 7755 441 26

Leave a Reply