கண்டேன் அந்த அதிசயத்தை….!
கண்டேன் அந்த அதிசயத்தை….! ஈழத்து சிதம்பரம் ஆஸ்தான தவில், நாதஸ்வர வழிவந்த கைலாயக்கம்பர் பரம்பரையில் வந்த N.K. கனேசன் மகன் சந்திரப்பிரியன்(சந்திரன்) கனேசன் இன்றைய தினம்(02.03.2025) வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்ற உற்சவத்தின் போது நாதஸ்வர இசை வழங்கியபோது N.K. கனேசன் அவர்களது அத்தனை முகபாவங்களையும் உடலசைவுகளையும், தலைமுடி அலங்காரம் உட்பட தன்னகத்தே கொண்டு பிரதிபலித்தமை 1980 களில் அமரர் N.K கனேசனின் கலைக்கான அர்பணிப்பை காணமுடிந்தது.
காரைநகர் மக்களால் அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத N.K. கனேசன் அவர்கள் மீண்டும் உயிருடன் வந்து நாதஸ்வர இசை வழங்கியது போன்ற உணர்வை என் உள்ளம் பெற்றது.
1980 களில் பக்திக்கு முதல் நாதஸ்வர தவில் கச்சேரிகளில் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கைலாயக்கம்பர் கனேசன் அவர்களின் புகழ் காரை மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும்.


Leave a Reply
You must be logged in to post a comment.