40 வருட கனவு ஒன்று நிஜமானது….
40 வருட கனவு ஒன்று நிஜமானது. 1980 களில் மருதடி பிள்ளையார் கோயில் பின்புறத்திலும், சடையாளி வைரவர் கோயில் புழுதியில் ஆலமர நிழலிலும் மாலை நேரங்களில் வயதானவர்கள் cards விளையாடுவார்கள். அதில் 304 விளையாட்டில் பாலண்ணை ஹீரோவாக விளங்கினார்.
கம்மாரிசு அடிப்பதிலும் பிழை விட்டால் கன்னத்தை பதம் பார்ப்பதிலும் தர்மலிங்கம் பாலண்ணை அதிவிஷேசம்.
அன்றிலிருந்து அவருடன் ஒரு கை போடனும் என்ற ஆசை வளர்ந்தது. இன்று அந்த ஆசை நிறைவேறியது. நன்றி பாலன் அண்ணை. அது மட்டுமன்றி காரைநகர் மக்களிற்கு களவெடுக்காமலும் பொய் சொல்லாமலும் எந்த தொழிலையும் செய்யலாம் என்றும், செய்யும் தொழிலே தெய்வம் என்றும் உணர வைத்துக்கொண்டிருப்பவர். அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி பாலன் அண்ணை.

Leave a Reply
You must be logged in to post a comment.