பதவிகள் இன்றி பணிபுரியும் சேவையாளர் திரு.குருபரன் சுப்பிரமணியம் ஊரை நேசிக்கும் ஊரவர்களின் நண்பன். எல்லா நாளும் புதிய நாளே.
பதவிகள் இன்றி பணிபுரியும் சேவையாளர் திரு.குருபரன் சுப்பிரமணியம் ஊரை நேசிக்கும் ஊரவர்களின் நண்பன். எல்லா நாளும் புதிய நாளே.


ஊர் மக்களின் குறிப்பாக பாமரமக்களின் நலனில் அக்கறையுடன் சேவைசெய்யும் திரு.குருபரன் அவர்களின் பிறந்த நாளிற்காக மேலே எடுத்துவரப்பட்டுள்ள படத்தொகுப்புடன் mixing செய்யப்பட்டுள்ள பாடல் 100% பொருத்தமாக உள்ளது. அது தான் உண்மையில் குருபரன் அவர்கள்.
நீதிக்காக எவர் எதிர்த்தாலும் துணிந்து குரல் கொடுக்கும் திறமையும் வல்லமையும் கொண்டவர்… .எதிரி யாராகவும் இருக்கட்டும்… நீதி, நியாயம், மனிதாபிமானம் இல்லாவிட்டால் அமைச்சராக இருந்தாலும் ஆட்டுக்குட்டியாக இருந்தாலும்…
பார்ப்பாதற்கு பாமரன் போல் இருப்பான்…
ஏழைகளிற்காக விஸ்வரூபம் எடுப்பான்….
கெட்டவன்கள் முகமூடி கிழிப்பான்…
நல்லவன்கள் சொல்லும் சொல் கேட்பான்….
இவன் போகும் வழியில் நில்லாதே…
சீறும் சிங்கம் இவனல்லோ…
ரஜனிக்காக பாடிய பாடல் வரிகள் எங்களூர் குருபரனுக்கும் பொருந்தியதும் உண்மை தான்.
ரஜனிக்காக படத்தில் பொருந்தினாலும் நிஜத்தில் எங்களூர் நிஜ கதாநாயகன் குருபரன் அவர்களிற்கு மிகமிக பொருத்தமாக உள்ளது.

Leave a Reply
You must be logged in to post a comment.