காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு கிராமிய வழிபாட்டு முறையில் ‘தண்டல்’ மூலம் வேள்விக்கான பொருட்கள் சேமிப்பு.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வியை முன்னிட்டு கிராமிய வழிபாட்டு முறையில் ‘தண்டல்’ மூலம் வேள்விக்கான பொருட்கள் சேமிப்பு.

2025 கடந்த வருடம் முதல் பழமை மாறாது பொங்கல் வேள்வியை ஆதீனகர்த்தாக்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட செயற்குழுவினர் செயற்படுத்தி வருகின்றனர்.

1980களில் ஆதீனகர்த்தாக்களான அமரர் கனகசபை, அமரர் மயில்வாகனம், அமரர் சோமசேகரம்பிள்ளை ஆகியோர் ஊரில் பொங்கலிற்காக ‘தண்டல்’ செய்வார்கள். அதனைப்பின்பற்றி மீண்டும் கிராமிய வழக்கப்படி வேள்விக்காக சிறுவர்கள் மற்றும் அடியவர்கள் இணைந்து தண்டலில் ஈடுபட்டனர்.

அத்துடன் வருடந்தோறும் ஆதீனகர்த்தாக்கள் சார்பாக பொங்கல் வேள்விக்கான உபயகார்ர்கள் இருந்தாலும் கோயில் சார்பாகவும் அடியவர்கள் சார்பாகவும் உபயகாரர்கள் தவிர்த்தும் பலவித செயற்பாடுகள் மற்றும் கிரியைகள் நடாத்தப்படுவது உண்டு. உபயகாரர்கள் சார்பாக அவர்கள் தம்மாலான காணிக்கைகளையும் செயற்பாடுகளிற்கான நிதியுதவியையும் வழங்கி வருகின்றார்கள்.

ஆனாலும் கோயில் சார்பாகவும் அடியவர்கள் சார்பாகவும் உபயகாரர்களை விடவும் பலமடங்கு நிதி செலவிடப்படுவது வழமையான செயற்பாடு ஆகும்.

பொங்கல் வேள்வியை முன்னிட்டு கோயில் மற்றும் கோயில் சுற்றுப்புறம் மற்றும் திருப்பணிகள் பலவும் அடியவர்கள் சார்பாக நிறைவேற்றப்படுகின்றன. அவை உபயகாரர்கள் உதவியன்றியும் கோயில் நிர்வாகத்தின் செலவுகள் இன்றியும் இப்பகுதி அடியவர்களின் தனிப்பட்ட நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்படுபவை.

2026 இந்த ஆண்டும் வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் வதியும் அடியவர்களது உதவியுடன் வேள்வியை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

கோயில் சுவர்கள் மீண்டும் வர்ணம் தீட்டப்பட்டதுடன், தேவையான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒலி ஒளி அமைப்பு, மடை போடுவதற்கான சீமெந்திலான மேடை, அதற்கான சமையலாளர் உதவிகள், சமையல் மற்றும் நைமித்தியத்திற்கான மடைப்பள்ளி உதவியாளர் சம்பளம் என்பனவும் உபகாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் அல்லாது இப்பகுதி அடியவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் விளக்கு வைத்தல் நிகழ்வின் போது கூறப்பட்ட விடயங்கள் சார்பாக இக்கோயிலின் வளர்ச்சியில் அக்கறையடைய அடியவர்கள் சிலர் தொடர்பு கொண்டு சில பின்னூட்டங்களை வழங்கினார்கள். அதன் காரணமாக கோயில் ஆதீனகர்த்தாக்கள் மற்றும் உபயகாரர்கள் உதவிகள் மட்டுமன்றி திருவிழாக்களை முன்னிட்டு நடைபெறும் திருப்பணிகள் மற்றும் திருவிழாக்களின் போது மேலதிக பல செயற்பாடுகள் இப்பகுதி அடியவர்கள் முன்னின்று தனிப்பட்ட நிதி உதவிகள் மூலமும் செயற்படுத்தி வருகிறார்கள்.

திருவிழா உபயகாரர்கள் திருவிழாவிற்கு தேவையான குறைந்த பட்ச நிதியோ அல்லது தேவையானளவு காணிக்கைகளை மட்டுமே வளங்கி வருகின்றனர். உள்ளூலிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வதியும் அடியவர்கள் தமது நம்பிக்கைக்குரியவர்கள் ஊடாக ஆதீனகர்த்தாக்களின் அனுமதியோடு திருப்பணிகளையும் தொண்டுகளையும் நிறைவேற்றி வருகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த திருவிழாக்காரர்களையும் உயர்த்தியோ அன்றி தாழ்த்தியோ செய்திகளை வெளியிடவில்லை என்பதுடன் கடந்த காலங்களுடனும் ஒப்பிடவில்லை என்பதும் தற்போது நடைபெறுவன பற்றியே அறிவித்தும் வருகிறேன். இப்பகுதி மக்களிற்கு போதிய தெளிவும் புரிதலும் இருக்கிறது என்பதை நம்புகிறேன்.

ஓம் சக்தி.

More From Author

12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாளுக்கு விளக்கு..! இன்றும் கிராமிய கோயிலாக விளங்கிவரும் நிலிப்பந்தனை துர்க்கை அம்பாளிற்கு பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைத்தல் என்னும் சம்பிரதாய கொடியேற்றல் திருவிழா நடைபெற்றது.

16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை வேள்விக்கு தயாராகியுள்ள காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம். 15.05.2026 வெள்ளி மாலை பொங்கல்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.