நாள் : Saturday, September 12, 2026
--:--:--
👁️
Amman Temple

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாளுக்கு விளக்கு..! இன்றும் கிராமிய கோயிலாக விளங்கிவரும் நிலிப்பந்தனை துர்க்கை அம்பாளிற்கு பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைத்தல் என்னும் சம்பிரதாய கொடியேற்றல் திருவிழா நடைபெற்றது.

காரைநகர் நீலிப்பந்தனை அம்பாளுக்கு விளக்கு..!

இன்றும் கிராமிய கோயிலாக விளங்கிவரும் நிலிப்பந்தனை துர்க்கை அம்பாளிற்கு பொங்கல் வேள்வியை முன்னிட்டு விளக்கு வைத்தல் என்னும் சம்பிரதாய கொடியேற்றல் திருவிழா நடைபெற்றது.

16.05.2026 நடைபெறவுள்ள வேள்வியை முன்னிட்டு 08.05.2026 இன்று நடைபெற்ற ‘விளக்கு வைத்தல்’ திருவிழா காட்சிகள்.

வருடந்தோறும் நடைபெறும் வேள்வி உற்சவம் ஆதீனகர்த்தாக்களின் உபயமாக நடைபெற்று வந்த போதிலும் 1980ம் ஆண்டுகளிற்கு பின்னர் கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்தினை முன்னின்று செயற்படுத்திய ‘அமுதா நகைமாளிகை’ உரிமையாளர் அமரர் க.கந்தையாபிள்ளை அவர்களும் ஆதீனகர்த்தாக்களுடன் இணைந்து தனது உபயமாகவும் ஒன்றுவிட்ட ஒரு வருடம் வேள்வி திருவிழாவை நடாத்துவதற்கு முன்வந்ததுடன் ஆதீனகர்த்தாக்களும் அதற்கான அனுமதியை வழங்கி செற்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஆதீனகர்த்தாக்களான அமரர் க.சோமசேகரம்பிள்ளை, அமரர் விதானை அருளையா கும்பத்தினர் தனித்தனியாகவும், அமரர் கந்தையாபிள்ளை குடும்பத்தினர் தனித்தனியாகவும் வேள்வி திருவிழாவினை செய்து வந்தனர். அதன் அடிப்படையில் 1996ம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு ஆதீனகர்த்தாக்கள் பரம்பரையினரும் தனித்தனியாகவும், அமர ர் க.கந்தையாபிள்ளை குடும்பத்தினர் தனியாகவும் இத்திருவிழாவினை செய்து வந்துள்ளனர். அதன் பிரகாரம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிற்கு ஒரு தடவை முறையே அமரர் க.சோமசேகரம்பிள்ளை குடும்பத்தினர், அமரர் விதானை அருளையா குடும்பத்தினர், அமரர் க.கந்தையாபிள்ளை குடும்பத்தினர் என மூன்று திருவிழா உபயகாரர்களைக்கொண்டு நடைபெற்று வந்துள்ளது.

2026 இந்த வருடம் ‘அமுதா நகைமாளிகை’ அமரர் க.கந்தையாபிள்ளை குடும்பத்தினர் சார்பான உபயமாக இந்த வருட வேள்வி திருவிழா நடைபெற்று வருகிறது.

செய்திகள், படங்களோடு எங்கள் ஊர் கோயிலின் கடந்த கால வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அமரர் க.கந்தையாபிள்ளை குடும்பத்தினருக்கும் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தில் ஆதீனகர்ரத்தாக்களிற்கு இணையான மதிப்பும் மரியாதையும் வளங்கப்பட்டு வந்துள்ளதும் அதற்கு அமரர் கந்தையாபிள்ளை அவர்களது பாரியார் அமரர் துரையப்பா குமாரசாமி இராஜேஸ்வரி அவர்களது குடும்பம் சார்பாகவும் இக்கோயிலின் வளர்சியில் காட்டிய அக்கறையும் அனுசரணைகளும் காரணமாக இருந்துள்ளன.

இக்கோயிலின் கடந்த 60 ஆண்டுகால வரலாறுகளை அறிந்த இப்பகுதி பெரியவர்கள் இன்னமும் சாட்சிகளாக உள்ளனர். சிறியேனாகிய நான் தவறான தகவல்களை கூறியிருந்தால் உரிய வகையில் எனது தகவல்களை திருத்திக்கெள்ள உதவுங்கள். நன்றி.

15.05.2026 அடுத்த வெள்ளிக்கிழமை மாலை பொங்கலும், 16.05.2026 அன்று நீலி அம்பாளிற்கு வேள்வியும் நடைபெறும்.

2025 க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம்(இன்றோ நாளையோ) வெளிவரவுள்ள நிலையில் J/47 இல் அதிகூடிய சித்தியினை பெற்ற பாடசாலை மாணவர்கள் மூவர் கெளரவிக்கப்படுவார்கள். அத்துடன் J/47 இல் இருந்து பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் 16.05.2026 அன்று நடைபெறும் வேள்வி உற்சவத்திற்கு செல்லுங்கள். உங்களில் இருவருக்கு அதிஷ்டம் மூலம் தெரிவு செய்யப்பட்டு A/L கல்வியை தொடர்வதற்கான கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை...

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605