Oct 09 உலக அஞ்சல் தினம்.
காரைநகர் பெரிய தபால் கந்தோர் நடாத்திய அஞ்சல் தின நிகழ்வுகள் 09.10.2025 இன்று வியாழக்கிழமை ‘எனது ஊர் காரைநகர’ www.karainews.com அனுசரணை ஆதரவுடன் தபாலதிபர் திருமதி கமலேஸ்வரி சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் காரைநகர் பிரதேச ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்றுவருபவர்களும் 2026ம் ஆண்டு அடுத்த வருடம் புலமைப்பரீட்சை எழுதவுள்ள 4ம் தரம் பயிலும் மாணவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வதியும் மாணவர்களை உடைய ஐந்து பாடசாலைகளை தெரிவு செய்து 70 மாணவர்களிற்கு ஊக்குவிப்பு வளங்கும் வகையில் பரிசில்கள் வழங்கவும் ஆதரவு வளங்க தபாலதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரு. தீசன் திரவியநாதன் அவர்களினால் பரிசில்களிற்கான ஆதரவு வளங்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் இறுதி நேரத்தில் மற்றுமொரு பாடசாலையை சேர்ந்த 20 மாணவர்களிற்கான அனுசரணை மற்றுமொருவரின் அனுசரணையுடனும் மொத்தமாக 90 மாணவர்களிற்கான ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கியும் உலக அஞ்சல் தினம் காரைநகர் பெரிய தபால் கந்தோரில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
அத்துடன் 2025 இந்த ஆண்டு புமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற தபாலக உத்தியோகத்தர்களது பிள்ளைகள் தபாலக உத்தியோகத்தர்களது அனுசரணையோடு கெளரவிக்கப்பட்டனர்.
“எனது ஊர் காரைநகர்” karainews.com ஊடாக கடந்த காலங்களிலும் உலக அஞ்சல் தினத்தையொட்டி காரைநகர் பெரிய தபால் கந்தோர் ஊடாக இயங்கி வரும் NSB சிறுவர ஆரம்ப சேமிப்பு கணக்கு 50க்கு மேற்பட்டவர்களிற்கு 500 ரூபா வைப்பிலிட்டு வழங்கி தொடக்கி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: படங்கள் KRG post.

























































