07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள வைத்தவர். மொழிக்குள்ளே மோகம் கற்பித்தவர். ஊரிற்குள்ளே உயரங்களை தொட்டவர்… ! கம்பனையும் காரைநகர் மக்களிற்கு அறிமுகம் செய்து வைத்த கம்பவாரிதி…! காரைநகரிலும் கம்பனுக்கு கலாசார வழிசமைத்து கம்பனை அறியவைத்தவர். எங்கள் ஊர் காரைநகர் உலகெலாம் தமிழுக்கு ஒப்பாக இன்றும் இனியும் விளங்கும் வகையில் தமிழுக்கும் தாய் மண்ணிற்கும் வளமாய் வாழ்பவர்.





