கனடாவில் என் வீட்டிலும் பாய்ந்தது தமிழருவி…! தமிழருவியின் ஊற்று தொடங்கிய இடமும், ஆரம்பமும் அனுபவங்களையும் கனடாவில் அளவளாவிய தருணம்.
07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள வைத்தவர். மொழிக்குள்ளே மோகம் கற்பித்தவர். ஊரிற்குள்ளே உயரங்களை தொட்டவர்… ! கம்பனையும் காரைநகர் மக்களிற்கு அறிமுகம் செய்து வைத்த கம்பவாரிதி…! காரைநகரிலும் கம்பனுக்கு கலாசார வழிசமைத்து கம்பனை அறியவைத்தவர். எங்கள் ஊர் காரைநகர் உலகெலாம் தமிழுக்கு ஒப்பாக இன்றும் இனியும் விளங்கும் வகையில் தமிழுக்கும் தாய் மண்ணிற்கும் வளமாய் வாழ்பவர்.



Leave a Reply
You must be logged in to post a comment.