16.05.2026 எதிர்வரும் சனிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் வேள்வி உற்சவம்.
மகோற்சவம் நடைபெறும் மற்றைய கோயில்களில் தேர்த்திருவிழாவிற்கு ஒப்பானதாக அம்பாளிற்கான வேள்வி உற்சவம் நடைபெறும். காரைநகர் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடவேண்டும்.




அம்பாளிற்காக போடப்படும் மடை பிரசாதங்கள் போதியளவு கடந்த காலங்களில் வழங்கப்பட்டும் பக்தி பரவசமூட்டும் கிராமிய வழிபாட்டு முறையில் நடைபெறும் பொங்கல் வேள்வியில் கலந்து கொண்டு துர்க்கை அம்பாளின் அருட்கடாட்சம் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம் தொடர்ந்து கிராமிய முறைப்படியான வழிபாட்டில் தொடரவும் கிராமிய வழிபாட்டில் சிறந்து விளங்கவும் ஆதரவு வழங்குவோம்.
2025 சித்திரை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலம் நடைபெற்றுவரும் நித்தியபூசை கருமங்கள் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
ஆதீனகர்த்தாக்களின் நேரடி கண்காணிப்பில் செயற்குழுவினர் செயற்பட்டு வருவதும் ஒரு வருட முடிவில் மாதாந்த நித்தியபூசை கணக்கறிக்கை வெளியிட்டுள்ளதும் குறுப்பிடத்தக்கது



