நாள் : Friday, August 28, 2026
--:--:--
👁️
Eelathu Chithamparam

சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. கோயில்களின் பிரதேசமாக காரைநகர் விளங்கி வருகின்றது.

சிவபூமியாம் காரைநகரில் 16 கோயில்கள் இராஜகோபுரங்களுடன் விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. 45 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. கோயில்களின் பிரதேசமாக காரைநகர் விளங்கி வருகின்றது.

13.05.2026 இன்று வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நிறைவு பெற்று மண்டலாபிஜேக பூர்த்தியினையும் கண்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் 05.07.2026 அன்று ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் புனருத்தாபன கும்பாபிஜேகம் நடைபெறவுள்ளது. இதுவரை இரட்டை இராஜகோபுரங்களுடன் சிவனுக்கும் ஐயனாருக்கும் இருந்து வந்துள்ள நிலையில் தெற்கு வாயில் சிவகாமசுந்தரி அம்பாளிற்கும் இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இராஜகோபுரங்கள், சிற்பங்கள், மற்றும் கோயில் உட்புறம் என்பன பலகாலமாக வர்ண கலர் பூச்சுக்களால் அழகு பெற்றிருந்த நிலையில் தற்போது தனித்துவமாக காவி வர்ண பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

காரைநகர் பிரதேசம் எங்கும் பல கோயில்கள் இருந்தாலும் காரைநகர் மக்கள் அனைவரின் மனங்களிலும் ‘எங்கள் கோயில்’ என்று உணரவைக்கின்ற பக்தியையும் உணர்வையும் தருவது திண்ணபுரம் சிவன் கோயிலாகும். கடந்த மூன்று ஆண்டுகளிற்கு மேலாக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறுக சிறுக திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ள போதிலும் இதோ 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கான திருநாள் குறிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது எங்கட கோயில்.

காலம் பதில் சொல்லட்டும் எமது கடமைகளை, எமது பிறவிப்பயனை வழங்குவோம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605