Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

குணரட்ணம் வள்ளியம்மை |மறைவு: 03.02.2013

குணரட்ணம் வள்ளியம்மை
சுப்பிரமணியம் வீதி, இடைப்பிட்டி,
காரைநகர்

தோற்றம்: 08.01.1943 மறைவு: 03.02.2013


காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் வள்ளியம்மை
அவர்கள் 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் தங்கம்மா தம்பதிகளின் மகளும் அமரர் ஆறுமுகம், அமரர் வேலுப்பிள்ளை, மற்றும் கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் உமாதேவி, கிருஸ்ணலீலா, விமலாதேவி அகியோரின் பாசமிகு மைத்துனியும் அமரர் மோகனதாஸ், அமரர் மோகனஸ்ரீ, அமரர் மோகனராணி மற்றும் அம்பிகைபாகன்(இலங்கை), தயாநிதி(இலங்கை), அம்பிகா(இலண்டன்), புவிராஜ்(இலங்கை), தனராஜ்(இலங்கை), மோகனா(இலங்கை),
மனோகரதாஸ்(கனடா), மனோரதி(கனடா), மனோகௌரி(நியூசிலாந்து), மனோதர்ஷினி(கனடா), மனோபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் சுப்பிரமணியம் வீதி இடைப்பிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் 04.02.2013
திங்கட்கிழமை நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: கந்தையா(சகோதரன்) கனடா

கந்தையா – 416 298 2487 (கனடா)
மனோகரதாஸ் – 416 994 7229 (கனடா)
தனராசா – 94 77 770 712 402 (இலங்கை)

Leave a Reply