Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை | இறைவனடி 28.02.2011

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை
(இலங்கை புகையிரத திணைக்களம்)

வாரிவளவு, காரைநகர் -வெள்ளவத்தை
காரைநகர் வாரிவளவு, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை அவர்கள் 28.02.2011 அன்று இறைவனடி
சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற முத்தையாவிள்ளை-மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புங்குடுதீவு கிராமசபைத்தலைவர் மதியாபரணம்(துீ)-கனகம்மா தம்பதிகளின் மருமகனும், இளமதியின் ஆருயிர் கணவரும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களான அருள்நந்தி, அச்சுதன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுப்பிரமணியபிள்ளை(கனடா), தவநிதி, தவமணி(யாழ்-ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலை
ஆசிரியை) ஆகியோரின் அன்புச்சகோதரரும், மனோகௌரி(கனடா), காலஞ்சென்ற ஆசிரியர்
கிருஷ்ணபிள்ளை மற்றும் சத்தியதாசன்(யாழ்.குமரன் சுற்றுலா விடுதி), யோகசுந்தரி(கனடா) ஆகியோரின் மைத்துனரும், வினாயகமூர்த்தி(கனடா) அவர்களின் அன்புச் சகலனுமாவார்.


அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 01.03.2011 இல் இருந்து வைக்கப்பட்டு 03.03.2011 நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தெகிவளை-கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: ச.இளமதி (மனைவி)
16A, 1/2 பெரேரா லேன், வெள்ளவத்தை, கொழும்பு-6
071 8278185, 2589976
முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை: சகோதரன்(ரொறன்ரோ)
416 – 362 8693

Leave a Reply