Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் | மறைவு: 06.Oct.2014

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம்
மாப்பாணவூரி, காரைநகர்
(நல்லூர், யாழ்ப்பாணம்)

மறைவு: 06.10.2014

காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், குறுக்கு வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் 06.10.2014 கடந்த திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் அருணாச்சலம் தனபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சிவகொழுந்து தம்பதியரின் அன்பு மகளும், சுரேஸ்குமார்(பொறியியலாளர் USA), சுகன்யா (ஆசிரியை. யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், குகதர்சினி(USA), ரமணன்(முகாமைத்துவ உதவியாளர், வலி தென்மேற்கு பிரதேச சபை, மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ரட்ணாங்கி, சுதன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவி;க்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


தகவல்: குடும்பத்தினர்
82/2 குறுக்கு வீதி, நல்லூர்
தொலைபேசி இல: 021 222 5356 ஃ 077 907 1505

Leave a Reply