Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சுப்பிரமணியம் தயாரஞ்சன் | மறைவு: 03.10.2014


மாப்பாணவூரி, காரைநகர்
(கொழும்பு)

மறைவு: 03.10.2014

காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்
தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வானிலை அவதானிப்பு நிலையம்) 03.10.2014 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் சுப்பிரமணியம் செல்வமணி தம்பதியரின் பாசமிகு மகனும், வத்சலாவின் அன்புக் கணவரும், திவியந்தனின் அன்புத் தந்தையும், தயாபரன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நாளை (05.10.2014) ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06.10.2014 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்ப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

Leave a Reply