நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’ – 14 மில்லியன் செலவில் மருதடி- நீலிப்பந்தனை வீதி, மற்றும் நீலிப்பந்தனையில் இருந்து சடையாளி வரையான நீர் வடிகால் அமைப்பினை செய்து வழங்க பொதுமக்கள் முன்னிலையில் உறுதியாக தெரிவித்து பெரும் ஆதரவை பெற்றுக்கொண்டார்கள்.

நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’

நீலிப்பந்தனை மக்களின் 60 ஆண்டுகளிற்கு மேற்பட்ட பிரச்சனைகளிற்கு தீர்வாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு.K. கோவிந்தராஜன் மற்றும் இப்பகுதி( J/47) பிரதேச சபை உறுப்பினர் திரு.S.சிவகுமார்(ஆனந்தன்) அவர்கள் ஒன்றிணைந்து கடந்த பெப்ரவரி மாதம் நீலிப்பந்தனை மக்களின் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வாக இப்பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து சுமூகமான தீர்வை எட்டியிருந்து. அத்துடன் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் இணைந்து பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட 12 மில்லியன் (ஒரு கோடி இருபது இலட்சம்) ரூபாய்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 2 மில்லியன்(இருபது இலட்சம்) ரூபாய்கள் மொத்தம் 14 மில்லியன் செலவில் மருதடி- நீலிப்பந்தனை வீதி, மற்றும் நீலிப்பந்தனையில் இருந்து சடையாளி வரையான நீர் வடிகால் அமைப்பினை செய்து வழங்க பொதுமக்கள் முன்னிலையில் உறுதியாக தெரிவித்து பெரும் ஆதரவை பெற்றுக்கொண்டார்கள்.

கலந்து கொண்ட காரைநகர் பிரதேச சபை செயலாளர், மற்றும் இப்பகுதி கல்வியியலாளர்கள் கலாதிதி வீரமங்கை யோகரட்ணம், ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் விஜயரட்ணம் பிறேம்தாஸ் குமாரசிறி, ஓய்வுபெற்ற Sri Lanka Telecom அதிகாரி திரு.சுப்பிரமணியம் மோகன்ராஜ், ஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவகரும் ‘காரைநகர் சேவையாளர்’ திரு.இராசசேகரம் இராசதுரை, இவர்களுடன் முன்னாள் நீதிபதி அமரர் S.A.E. ஏகநாதன் அவர்களின் வாரிசுகளில் ஒன்றானவரும் சட்டத்துறையில் பயின்றுவருபவருமான திரு. ஏகநாதன் விஜயபவானந்தா இவர்களுடன் ஈழத்து சிதம்பரம் தற்போதைய திருப்பணித்தொண்டன் திரு.S.வைத்திலிங்கம் இவர்களுடன் பொதுமக்களை ஒன்றிணைத்திருந்த நீலிப்பந்தனை அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகிகள் மற்றும் இவர்களுடன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் விசுவாசமான தொண்டர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்த நீலிப்பந்தனை வாழ் மக்களின் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தில் காரைநகர் பிரதேச சபை 60 ஆண்டுகால வரலாற்று பெருமையை பெற்றுக்கொண்டது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும் செயற்பட்டுவரும் எங்களூர் தவிசாளரும், சுயேற்சையாக களமிறங்கி காரைநகர் மக்களின் அதிகூடிய வாக்குகளைப்பெற்று தவிசாளராக சேவையாற்றிவரும் திரு. கிருஸ்ணன் கோவிந்தராஜன், மற்றும் UNP சார்பில் போட்டியிட்டு பிரதேச ரீதியில் வெற்றிபெற்று மக்களின் நன்மதிப்பைப்பெற்ற திரு. செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) அவர்களும் மக்களிற்கு வளங்கிய சத்தியத்திற்கு இணங்க மருதடி- நீலிப்பந்தனை வீதி, மற்றும் நீலிப்பந்தனை – சடையாளி நீர் வடிகால் திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளார்கள்.

அவர்களது ஊர்ப்பணி அரசியலுக்கும் அப்பாற்பட்டு மக்களிற்கு பயனுள்ளதாக அமையவும், ஒருவேளை தற்போதைய உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்தினை கருத்தில் கொண்டு தாமதமாகும் பட்சத்தில் மேற்படி தேவைகளிற்கான எரிபொருள்(பெற்றோல்) விலை வித்தியாசத்திற்கு ஏற்படும் செலவினை ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்றுக்கொண்டு, இப்பணிகளிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு லீட்டர் பெற்றோலுக்கும் 100 Rs வழங்கி இப்பணியினை இப்பணி பயனுற வேண்டிநிற்கிறது.

சொல்வதை செய்வதில் ‘எனது ஊர் காரைநகர்’ 100% ஒருபோதும் பின்வாங்கியது இல்லை.

காரைநகர் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை செயலாளர் மற்றும் J/47 பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரிற்கு அன்பான வேண்டுகோள். மக்களிற்கான நீங்கள் சொன்னதை நிறைவேற்றுங்கள். உங்களுடன் ‘எனது ஊர் காரைநகர்’ இன்று மட்டுமல்ல என்றும் உங்களுடன் கைகோர்ரத்து நடப்பதற்கு தயாராக உள்ளது.

சொன்னதை செய்யுங்கள். சொல்வதை செய்யுங்கள். மக்கள் உங்கள் பின்னே அவர்களுடன் ‘எனது ஊர் காரைநகர்’

நன்றி.

உங்களில் ஒருவன்.

ஊரிற்கானவன்(என்னையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்)

(புகைப்படத்தில் எங்களூர் காரைநகர் பிரதேச சபை தவிசாளரும் வண்டில் சின்னத்தில் சுயேற்சை அணி சார்பாக போட்டியிட்டு காரைநகர் மக்களில் அதிகளவானவர்கள் வாக்களித்து தவிசாளர் பதவியை முதல் தவணையில் பெற்றுக்கொண்ட திரு.கிருஸ்ணன் கோவிந்தராஜன் பின்னே காரைநகர் J/47 வலந்தலையில் UNP சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு.செல்லையா சிவகுமார்(ஆனந்தன்) அவர்கள்.

More From Author

12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் 05.07.2026 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது. GL Tharshan அவர்களின் தெளிவான வீடியோ பதிவுடன் மேலிருந்து பார்க்கும் Arial view உடன் கூடிய அழகிய கோயில் சுற்றாடல் காட்சிகள்.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள “சிவாச்சிரமம்” புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்தின் போது மீள திறக்கலாம்..!

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.