ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம்.
அதாவது தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது அதைத் துணிவுடன் எதிர்த்துத் தட்டிக் கேட்கும் ஆத்திரம்தான் ரௌத்திரம்.
இன்னும் சரியாகச் சொன்னால், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம் கொள்ளாமல் கோழையாய் இல்லாமலிருப்பது ரௌத்திரம்.
அநீதி நடக்கும் ஒரு இடத்தில் நாம் அதனை எதிர்த்து கேட்பது தர்மம். ஆனால் அந்த இடத்தில் நாம் அமைதியாக இருப்பது மிகவும் கோழைத்தனமாகும். ஆகவே ஒருவர் கோபம் படவேண்டிய நேரத்தில் நிச்சயம் கோவம் கொள்ள வேண்டும். அதுவே தேவை இல்லாத விஷயமாக இருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்.



