Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்
இளைப்பாறிய ஆசிரியர்
விளானை, களபூமி, காரைநகர்
(கொழும்பு)

விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் மகேஸ்வரியின் அன்பு கணவரும், சிவகௌரி, சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பரமு சபாரட்ணம், இராசம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான
சங்கரபிள்ளை இரத்தினம், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், மஞ்கயற்கரசி, புனிதவதி, சுந்தரமூர்த்தி, அருணந்தி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20.01.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் 21.01.2014 செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று கல்கிைிச பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மனைவி, பிள்ளைகள்: தகவல்: இராசேந்திரம்
கொழும்பு: (011) 94 11 236 7165

கனடா: 416 386 0433

Leave a Reply