Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் | மறைவு 17.03.2014

வேலுப்பிள்ளை அருட்பிரகாசம்
பொன்னாவளை, சின்னாலடி, தங்கோடை
காரைநகர்
காரைநகர் பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் 17.03.2014 அன்று
திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் அன்பு மகனும், இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன் (ஐயனார்) பார்வதிப் பிள்ளையின் அன்பு மருமகனும், கமலாம்பிகையின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நடராசா, மற்றும் பாலசிங்கம் (ஜேர்மனி), சிவபாக்கியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவி (ஜேர்மனி), சேனாதிராசா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20.03.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று களபூமி தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர் தொடர்புகளுக்கு :- 077 4158619

Leave a Reply