Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்
ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்
வேதரடைப்பு, காரைநகர்

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) 12.12.2013 வியாழக்கிழமை இரவு காரைநகரில் காலமானார்.

அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் விசுவலிங்கம் கனகேந்திம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முருகேசு – பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசொரூபி (கட்டடத் திணைக்களம்-யாழ்ப்பாணம்), திருமகள்தேவி(பிரதேச செயலகம்
-யாழ்ப்பாணம்), உமைபாகன் (கனடா), உமைநேசன் (கூட்டுறவுப் பரிசோதகர் – வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில், 13.12.2013 வெள்ளிக் கிழமை மாலை 2.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல்
தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
கணவர், பிள்ளைகள்
வேதரடைப்பு, காரைநகர்.

தொடர்புகளுக்கு: 
காரைநகர்: 077 666 9226
கனடா: உமைபாகன்: 647 889 1704

Leave a Reply