Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்
(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை)

எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு நேரடியாக வருகைதந்து ஆலோசனைகள் வழங்கியதுடன் பாடசாலை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி வந்த திருமதி சரஸ்வதி கனகேந்திரம் அவர்களின் திடீர் மறைவினை கேள்விப்பட்டு பெரும் துயரடைகின்றோம்!

அன்னாரது இழப்பு குடும்பத்தினருக்கும், எமது கல்விச்
சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். அன்னாரது திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.

பாடசாலை சமூகம்
யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை
மருதடி, காரைநகர்.

Leave a Reply