Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி. துரைச்சாமி நாகம்மா | மறைவு : 08.06.2014

திருமதி.துரைச்சாமி நாகம்மா
செம்பாடு, தங்கோடை, காரைநகர்
(வவுனியா)


காரைநகர், தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி நாகம்மா அவர்கள் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், சத்தியரூபி(இத்தாலி), உதயராணி(லண்டன்), தேவநாயகி(இலங்கை), ஜெயந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வராணி, பரமேஸ்வரன், பவளமலர், விக்கினேஸ்வரன், மகேஸ்வரன், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்கந்தராஜா(இத்தாலி), பவளச்சந்திரன்(லண்டன்), கருணாகரன்(இலங்கை), யோகலிங்கம்(பிரான்ஸ்)
ஆகியோரின் அன்பு மாமியாரும், சஸ்விதா, சஹானா, சர்மிளன், சஞ்ஜீவ், ஹருண்யா, டினுஷன், டிலக்ஷிகா, தட்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10.06.2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.பி 12:00 – பி.ப 2:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

வீட்டு முகவரி:
34 வைரவர் கோயில் வீதி
வைரவப்புளியங்குளம்
வவுனியா

தகவல்:
செல்லத்துரை பரமேஸ்வரன்(கனடா) 001-416-752-2678
செல்லத்துரை விக்கினேஸ்வரன்(இலங்கை) 0094-24-2222614
தேவநாயகி(இலங்கை) 0094-783-720-940

Leave a Reply