Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம் | மறைவு: 23.04.2012

மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம்
நடுத்தெரு, காரைநகர்

தோற்றம்: 04.10.1936
மறைவு: 23.04.2012

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசநாயகம் அவர்கள் 23.04.2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலங்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற
ஐயாத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற மதுரம் அவர்களின் அன்புக் கணவரும்
ஸ்ரீஜெகன், காலஞ்சென்ற ஸ்ரீசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும்
செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், குணவரசி அவர்களின் அன்பு மாமனாரும், நிதுஜா,
அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 24.04.2012 செவ்வாய்கக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் – செல்வநாயகம்(சகோதரர்): 94 21 4915530, 9477 4319812

ஸ்ரீஜெகன்(மகன்): நெதர்லாந்து: 316 247 80901

Leave a Reply