‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து வழங்கிய ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ 01.01.2023 அன்று நடைபெற்றது


‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் மூன்றாவது சேவையாளர் கௌரவம் 01.01.2023 அன்று காரைநகர் புதுறோட் சந்தியில் அமைந்துள்ள New Star கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
கனடாவில் குழந்தை நல வைத்தியர் Dr.வி.விஜயரத்தினம், கனடிய தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் மற்றும் திரு.தீசன் திரவியநாதன் அவர்களுடைய நிதி அனுசரணையுடன் விழா மாலை 2 மணியளவில் அத்திபுர கந்தன் அடியவர் ஞானபண்டிதன் திரிபுரகாந்தகன் அவர்களுடைய பக்தி கானங்களுடன் ஆரம்பமானது.
– காரைநகர் மக்களிற்காக பணிபுரிந்த ஐந்து சேவையாளர்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
– பிரதம விருந்தினராக யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் கௌரவ வி.மணிவண்ணன் அவர்களும்,
– சிறப்பு விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.T.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் திரு.R.T.ஜெயசீலன், வடமாகாண கல்வி அமைச்சின் முன்னாள் உதவிச்செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் திரு.க.பாலச்சந்திரன், கலாபூஷணம் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
– நிகழ்வில் கலந்து கொண்ட 100 பாடசாலை மாணவர்களிற்கு அதிஸ்ட குலுக்கல் மூலம் தலா 1000 ரூபா வழங்கப்பட்டது.
– நிகழ்வில் கலந்து கொண்ட 100 பெற்றோர்களிற்கு அதிஸ்ட குலுக்கல் மூலம் தலா 2000 ரூபா வழங்கப்பட்டது.
– கால் பந்து உலக கோப்பை கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே அறிவித்த 35 காரைநகர் விளையாட்டு கழக வீரர்களிற்கு தலா 5000 ரூபா வழங்கப்பட்டது.
கௌரவிக்கப்பட்ட ‘காரைநகர் சேவையாளர்கள்” விபரம் வருமாறு:
கல்வித்துறைக்கான கௌரவிப்பு
1.திரு. A.சோமாஸ்கந்தன் – ஓய்வு நிலை ஆசிரியர் – காரை இந்துக்கல்லூரி
2. திரு. நா.செல்வரத்தினம் – ஓய்வு நிலை அதிபர் – ஆசிரியர் காரை இந்துக்கல்லூரி
3. திருமதி. அருமைநாயகம் கமலேஸ்வரி – ஓய்வு நிலை ஆசிரியர் – காரை இந்துக்கல்லூரி
4. திருமதி. நாகரத்தினம் தனலட்சுமி(ராசாத்தி ரீச்சர்)- ஓய்வு நிலை அதிபர் வலந்தல வடக்கு அ.மி.த.க.பாடசாலை
5. திரு.கா.குமாரவேலு – ஓய்வு நிலை அதிபர், ஆசிரியர் – காரை இந்துக்கல்லூரி
சுகாதாரத்துறைக்கான கௌரவிப்பு:
Dr.அம்பிகைபாகன்
சமூகப்பணிக்கான கௌரவிப்பு:
திரு.வே.செல்வராசா
நிகழ்வு இடம் அனுசரணை திரு.நிமலன் கணபதிப்பிள்ளை New Star கல்வி நிலையம். 300க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்த ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ மூன்றாவது தடவையாக(2017, 2019, 2023) ‘செய்வன திருந்த செய்’ என்னும் முதுமொழிக்கு அமைவாக சிறப்புற நடைபெற்றது.
(பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர்கள் உரைகள், மற்றும் சேவையாளர்கள் விளக்கவுரை என்பவற்றை karainews முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்)



