வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளி) பள்ளிக்கூடத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பாடசாலை மாணவர்களின் கல்விசாரா வருடாந்த நிகழ்வுகளை சிரமம் இன்றி பாடசாலை நிர்வாகம் நடாத்துவதற்கு ஏற்ற வகையில் 15 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி நிரந்தர வைப்பில் இட்டால் வருடந்தோறும் நிகழ்ச்சிகளிற்கான அனுசரணையினை பெற்றுக்கொள்ள வேண்டிய சிரமம் ஏற்படாது எனவும், இனிவரும் காலங்களில் எவ்வித சிரமங்களும் இன்றி நடாத்த முடியும் எனவும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக 20.01.2023 அன்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு பழைய மாணவர்களிற்கு முகநூல் வாயிலாக அறியத்தரப்பட்டது. ஒருவார காலத்தினுள் இதற்கான நிதியினை பழைய மாணவர்கள் வழங்க முன்வந்தனர்.
31.01.2023 செவ்வாய்கிழமை 16 இலட்சத்து ஐம்பது ஆயிரம் (1.65 M) ரூபாய்கள் காரைநகர் தேசிய சேமிப்பு வங்கில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் பெயரில் வைப்பில் இடப்பட்டு வைப்பு சான்றிதள் அதிபர் அவர்கள் தலைமையாக கொண்டியங்கும் பழைய மாணவர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
23% வருடாந்த வங்கி வீதத்தில் 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்கள் வரை வட்டியாக பெறப்படும் என்பதும் நேரடியாக இந்த வட்டி பணம் பாடசாலை நிர்வாக நடைமுறை கணக்கில் வங்கியால் வைப்பிலிடப்படும் என்பதும் அறியத்தக்கது.
இந்த திட்டத்திற்கான நிதியுதவி வழங்கிய பழைய மாணவர்கள் விபரம் வருமாறு:
1. சி.கோபாலகிருஷ்ணன்(சந்திரன் France) – 2 இலட்சம்
2. அ.கணேசலிங்கம்(லிங்கன் Colombo) – 2 இலட்சம்
3. தீசன் திரவியநாதன் (கனடா) – 1 இலட்சம்
4. ம.ஞானேந்திரகுமாரி (கனடா) – 1 இலட்சம்
5. பி.பிறேமளகுமாரி (அவுஸ்திரேலியா) – 1 இலட்சம்
6. ச. சுந்தரேஸ்வரி (கனடா) – 1 இலட்சம்
7. வே. இராஜேந்திரன் (லண்டன்) – 1 இலட்சம்
8. வே. இராஜகோபால் (லண்டன்) – 1 இலட்சம்
9. கேதீஸ்வரதாசன் குடும்பம் – 1 இலட்சம்
10. பு. ரவீந்திரன் (லண்டன்) – 1 இலட்சம்
11. ஆ. செந்தில்நாதன் (சுவிஸ்) – 1 இலட்சம்
12. பா. சோமசுந்தரம் (கிளிநொச்சி) – 50,000 Rs.
13. ச. இராஜேஸ்வரி (ஜேர்மனி) – 50,000 Rs
14. செ. டர்முதா (கனடா) – 50,000 Rs
15. அ. ஜமுனா (லண்டன்) – 50,000 Rs
16. இ. தமிழ்செல்வி( பிரான்ஸ்) – 50,000 Rs
17. ந. கலைச்செல்வி( பிரான்ஸ்) – 50,000 Rs
18. இராமச்சந்திரன் குடும்பம் (Colombo) – 50,000 Rs
மொத்தம்: 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள்.
31.01.2023 அன்று காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு பாடசாலை பழைய மாணவர் சங்கத்திடம் ஒப்படைக்கும் போது கனடாவில் இருந்து வருகை தந்திருந்த பழைய மாணவி திருமதி. ச.சுந்தரேஸ்வரி அவர்களும் உடனிருந்தார்.







