‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகரில் இடர்கால கொடுப்பனவாக 23 குடும்பங்களிற்கு தலா 5,000 ரூபா வழங்கப்பட்டது|2021

அதனையடுத்து 1000 மலேசியன் ரிங்கிட் அனுப்பி வைத்தார். (ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்கள்). இதன் ஊடாக 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று 23 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு நேரடியாக அவர்களது வீடுகளிற்கு கொண்டு சென்று தலா 5,000 ரூபா வீதம் கொடுக்கப்பட்டது.

காநைரகர் சுகாதார திணைக்களத்தினரின் உதவியுடன் பயனாளிகள் இனம் காணப்பட்டனர். கூலித்தொழில் செய்து வரும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 12 பயனாளிகளும், 3 கர்ப்பிணிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் குடிப்பழக்கமற்ற கூலித்தொழில் மேற்கொண்டு தற்போதைய சூழ்நிலையால் வருமானமின்றி வாழும் குடும்பங்கள் என மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழும் குடும்பங்களை சேர்ந்தவர்களை இனம் கண்டு உதவிய காரைநகர் சுகாதார திணைக்களத்தினருக்கு மிகுந்த நன்றி.
மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் தனது பெற்றோர்களின் சொந்த இடமான காரைநகர் மண்ணை நினைவு கொண்டு உதவ முன்வந்த அந்த சரஸ்வதி அம்மையாருக்கு உதவிகள் வழங்கப்பட்ட பயனாளிகளின் வீடியோ பதிவுகள் இன்றே உடனடியாக அனுப்பப்பட்டன. அதனையும் பார்வையிட்டு ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தின் சேவையினை பாராட்டியவர் தொடர்ந்தும் இடர்கால கொடுப்பனவாக இது போன்ற குடும்பங்களிற்கு அடுத்து வரும் மாதங்களிலும் உதவ முன்வருவதாக கூறியுள்ளார்.

இந்த உதவிகளை நேரடியாக காரைநகரில் இருந்து செயற்படுத்திய செல்வராசா, பூவன் ஆகியோருக்கும், பயனாளிகளை அடையாளம் கண்டு உரியவர்களிற்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க உதவிய காரைநகரி சுகாதார பிரிவினருக்கும் ‘எனது ஊர் காரைநகர்’ சார்பாக மனமார்ந்த நன்றி!
தர்மம் தலை காக்கும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை நூலகத்திற்கு 888,000 RS உபகரணங்கள் கையளிப்பு! | 2021

பொது அறிவித்தல் |2021

Leave a Reply