Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) – 16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.!

வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு)

(திருப்பணி செல்வநாயகம்)

காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள் திருப்பணி சபையின் செயலாளரும், காரை மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவருமான திரு.வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 16.04.2025 கொழும்பில் ஈழத்து சிதம்பரத்தான் அடிகளை சென்றடைந்துள்ளார்.

அன்னாரது புனித ஆத்மா ஆண்டிகேணி ஐயனதும் தில்லை நடராஜப்பெருமானின் திருவடிகளில் நித்திய ஆனந்த பெருவாழ்வு பெற இறைஞ்சுவதோடு அன்னாரது பிரிவால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓம் சாந்தி.

Leave a Reply