நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Awareness

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

காரைநகர் மண்ணில் பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. கனடா காரை கலாசார மன்றத்தினால் கடந்த 15 ஆண்டுகள் வெளியிடப்பட்ட கணக்கறிக்கைகளே அதற்கான சாட்சியங்கள்.

28.04.2024 வரை திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகம் தமது இரண்டு ஆண்டுகளிற்கான கணக்கறிக்கையினை நிர்வாகத்திற்கோ அன்றி பொதுச்சபைக்கோ தெரிவிக்காத நிலையில் நிர்வாகத்தினை திரிசங்கு நிலையில் கைவிட்டுச்சென்றது.

தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன்(CPA), செயலாளர் திருமதி நாகேஸ்வரி சிவகுமார்(CPA), பொருளாளர் திரு.கிருஸ்ணரத்தினம்(Krish) சோமசுந்தரம்(CPA) ஆகிய மூவரும் Chartered Professional Accountant ஆக கனடாவில் தமது வேலைகளை புரிந்து வந்தாலும் தமது நிர்வாக காலத்திற்கான கணக்கறிக்கையினை வெளியிடாமல் சென்றது கனடா காரை கலாசார மன்றத்திற்கு இவர்கள் செய்த பெருந்துரோகம். அது மட்டுமன்றி 28.04.2024 அன்று மன்றம் திரிசங்கு நிலைக்கு செல்வதற்கு அன்று தலைமை பதவியை ஏற்றுக்கொண்ட திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் மாஜமனிதன் காரணமாக இருந்தாலும் கடந்த ஒருவருடமாகவேனும் கணக்கறிக்கையினை வெளியிட முடியாத மூன்று CPA க்களும் சந்தேகத்திற்கு உரியவர்களே.

அதற்கான காரணம் 28.04.2024 பொதுக்கூட்டத்தில் மட்டுமன்றி அதற்கு முன்னரும் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகம் பலமுறை நிர்வாக சபை கூட்டங்களை முன்னெடுத்த போதிலும் எந்தவொரு நிர்வாக சபை கூட்ட அமர்வுகளின் போதும் பொருளாளரினாலோ அன்றி தலைவர், செயலாளரினாலோ கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதில்லை.

அந்த நிர்வாகத்தில் நிர்வாக சபை உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த போதும் ஒவ்வொரு நிர்வாக சபை கூட்டங்களிலும் தீசன் திரவியநாதன் ஆகிய நானும் உபசெயலாளராக பதவி வகித்த திரு.ஜெயச்சந்திரன் தம்பிராசா ஆகிய எங்களால் மட்டுமே கணக்கறிக்கை வினவப்பட்டதுடன் திட்டமிட்டு அனைவரும் சேர்ந்து கணக்கறிக்கையினை நிர்வாக சபையிலும் தெரிவிக்க முடியாத நிலையில் வாய் மூலமாக மட்டும்… ‘ஆயிரம் இருக்கிறது, ஐநூறு இருக்கிறது’ என்று கணக்கு கூறப்பட்டது.

அதனையடுத்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இறுதி ‘காரை வசந்தம்’ நிகழ்வின் பின்னர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டு கணக்கறிக்கையினை கோரியிருந்தேன். ஆனாலும் விளம்பரதாரர்களிடம் இருந்து முழுமையாக பணம் வசூலிக்கப்பட்டதும் அடுத்த நிர்வாக சபை கூட்டத்தில் நிச்சயமாக சமர்ப்பிக்கப்படும் என வாக்குறுதி அளித்தே திரு.சிவசம்பு சிவநாதன் ஒவ்வொரு நிர்வாக சபை கூட்டங்களையும் நடாத்தி வந்துள்ளார்.

2023 காரை வசந்தம் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தின் மூலமாக நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கும், பல்கலைக்கழக மாணவர்களிற்கான உதவியும், விளையாட்டுக்கழகத்திற்கான உதவியும் வழங்கப்படும் என 2023 October மாதம் நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ‘2023 காரைவசந்தம்’ நிகழ்வினை நடாத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் நூறு டொலர்கள் பெறுமதியிலான குடும்ப அனுசரணை ரிக்கட்டுக்கள் பலவும் விளம்பர அணுசரணைகள் பலவும் என்னாலும் ஜெயச்சந்திரன் தம்பிராஜாவும் இணைந்து கனடாவில் பல காரைநகர் மக்களின் வீடுகளின் கதவுகளை தட்டி அனுசரணைகளை பெற்றுக்கொடுத்தோம்.

2023 காரைவசந்தம் முடிந்து நான்கு மாதங்கள் வரை சப்பைக்காரணங்கள் கூறி தட்டிக்கழித்து வந்த மூன்று CPA க்கள் 2024 April மாதம் கடைசியாக நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்திலும் கணக்கறிக்கை இன்றி வந்ததுடன் 28.04.2024 பொதுக்கூட்டத்திற்கு முன்னர் நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு இமெயில் ஊடாக அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்து என்னைத்தவிர மற்றைய நிர்வாகசபை உறுப்பினர்களை நம்ப வைத்து துரோகம் செய்தனர்.

இருந்த போதிலும் வாய்க்கணக்காக வங்கியில் எவ்வளவு உள்ளதெனவும், மேலும் 2023 காரைவசந்தம் மூலம் அறவிடப்பட வேண்டிய மிகுதி பாக்கி எவ்வளவு எனவும் கேட்டு அதில் இருவரது அனுசரணைக்கான பணம் என்னால் பெற்றுக்கொடுக்கப்பட்டு 4500 டொலர்கள் வரை வங்கியில் இருப்பதாகவும் வாய்க்கணக்கின் மூலம் அறிந்து கொண்டு அதனை ‘காரைவசந்தம் 2023’ இன் மூலம் பெற்ற இலாபமாக நிர்வாகசபை எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 5 இலட்சமும், கலாநிதி விளையாட்டு கழகத்திற்கு ஒரு இலட்சமும் ஒன்பது பல்கலைக்கழக மாணவர்களிற்கான மாதாந்த உதவிக்காக வட்டிப்பணத்தில் இருந்து கிடைக்கப்பெறும் நிதிப்பற்றாக்குறையை போக்க 4 இலட்சமும் என மொத்தம் 10 இலட்சம் கடைசியாக நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் ஒற்றைக்காலில் நின்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்மூலம் ‘காரைவசந்தம் 2023 மூலம் கிடைக்கப்பெறும் இலாபம் ஊரிற்கான பணிகளிற்கு அனுப்பப்படும்’ என்ற கனடா காரை கலாசார மன்றம் கனடாவில் காரைநகர் மக்களிற்கு கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவேனும் நிறைவேற்ற முயற்சி செய்தேன். அதன் பிரகாரம் அந்த நிதி அன்றைய தினமே அனுப்பப்பட வேண்டும் எனவும், அதற்குரிய விபரத்தினை காரைநகர் அபிவிருத்தி சபைக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலமாக தெரிவிக்கவும் ஆவண செய்ததுடன் அப்போது உபசெயலாளராக இருந்த திரு.ஜெயச்சந்திரன் தம்பிராஜா அதனை உடனடியாகவும் நிறைவேற்றியிருந்தார்.

26.04.2024 அன்று காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்திற்கு எழுத்து மூலமான அறிவித்தல் கிடைக்கப்பெற்றும், 27.04.2024 அன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் வங்கிக்கணக்கிற்கு பத்து இலட்சம் கிடைக்கப்பெற்றும் இன்று வரை (14.04.2025)அதனை உரியமுறையில் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையும் இனிமேல் தான் ஊர்ப்பணி செய்யப்போகிறார்களாம்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக கடந்த 15 ஆண்டுகள் எனது சக்திக்கும் மீறிய அணுசரணைகள் ஊடாகவும் அதற்காக கொடுத்த பல மணி நேர உழைப்புகளாலும், ஒவ்வொரு மன்றத்தின் நிகழ்வுகளின் போதும் கனடாவில் காரைநகர் மக்களிடம் இருந்து ஊரின் பெயரால் பெறப்படும் பணத்தின் குறைந்த பட்சம் 20% சத விகிதமேனும் ஊரிற்கான பணிகளிற்கு செல்ல வேண்டும் என்பதை மட்டுமே கருத்தாக கொண்டு தனிப்பட்டளவில் நிர்வாகத்தினருடன் பலவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபட்டதுடன் தனிப்பட்ட பகையாகவும் சில வாக்குவாதங்கள் வளர்ந்து வந்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தில் நிர்வாக சபை கூட்டங்களில் நிர்வாக அங்கத்தவர்களினால் கொண்டுவரப்படும் வேண்டுகோள்கள், ஊரிற்கான சேவைகள் ஓரளவேனும் செவிமடுக்கப்பட்டதனால் என்னால் முன்வைக்கப்பட்ட பல ஊரிற்கான பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகங்கள் நிறைவேற்றியுள்ளன.

ஆனால் இனிவரும் காலங்கள் அப்படியாக அமையப்போவதில்லை. ‘கனடா காரை கலாசார மன்றம் ஊரிற்கு 5 சதமும் அனுப்ப தேவையில்லை எனவும், கனடா வாழ் காரைநகர் மக்களிடம் ஊரின் பெயரால் மன்றம் நடாத்துவோம், ஊரின் பெயரால் அணுசரணைகள் பெறுவோம், ஊரின் பெயரால் ஒன்றுகூடுவோம், ஊரின் பெயரால் கழியாட்டம் நடாத்துவோம் ஆனால் அதில் மிஞ்சுகிற நிதியோ அல்லது ஊரின் தேவையறிந்து ஏதாவது ஒரு திட்டத்தை செயற்படுத்தவோ தேவையில்லை’ என்கின்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளவர்களே இன்று திரிசங்கு நிலையில் உள்ள கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களும், மன்றத்தை இனியும் நிர்வகிக்க விரும்புபவர்களும்.

ஆகவே இப்போது திரிசங்கு நிலையில் உள்ள கனடா காரை கலாசார மன்றம் மேலே சென்று சொர்க்கலோகம் சென்றாலும், கீழே விழுந்து நரகலோகம் வந்தாலும் காரை மண்ணிற்கோ மக்களிற்கோ எந்தவித நற்பயனும் தரப்போவதில்லை என்பது கடந்த 15 வருட மன்றத்தின் நிர்வாகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் எனது தனிப்பட்டட கருத்து ஆகும். தொடர்ந்தும் பேசுவோம்.

நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605